பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிப்பதற்கு கோடி கோடியாக சம்பளம் வாங்கிய நடிகர்கள்,நடிகைகள்.? ஆத்தாடி இத்தனை கோடியா இதோ முழு லிஸ்ட்.!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 30ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்பொழுது வரை வசூலில் அதிகமாக வசூல் செய்து வருகிறது மேலும் இந்த திரைப்படத்தில் பல சினிமா பிரபலங்கள் நடித்துள்ளதால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இந்த திரைப்படத்தை கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் வெளியாகும் என கூறப்படுகிறது.அதன்படி பார்த்தால் ரசிகர்கள் பலரும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் கொஞ்சம் சீக்கிரமாக வந்தால் நன்றாக இருக்கும் எங்களால் காத்திருக்க முடியவில்லை.

என பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறார்களாம். மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகளின் சம்பளம் இவ்வளவுதான் என்பது பற்றி ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

அதன்படி பார்த்தால் இந்த திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்த விக்ரமிற்கு சம்பளம் ரூ 12 கோடி எனவும் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யாராய்க்கு ரூ 10 கோடி,அருண்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடித்த ஜெயம் ரவிக்கு ரூ 8 கோடி,வந்திய தேவன் கதாபத்தில் நடித்த கார்த்திக்கு ரூ 5 கோடி,குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷாவிற்கு ரூ 2 கோடி,பிரகாஷ்ராஜ் மற்றும் ஐஸ்வர்யாலக்ஷ்மிக்கு ரூ1.5 கோடி வரை சம்பளம் அளிக்கப்பட்டுள்ளது என இந்த தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டாவது பாகம் மிக விரைவில் வந்தால் மக்களுக்கு பிடிக்கும் என பலரும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை பார்த்துவிட்டு விமர்சனங்கள் கொடுத்து வருகிறார்கள் அது போக சினிமா பிரபலங்கள் பலருக்கும் இந்த திரைப்படம் பிடித்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

Leave a Comment