சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்டு சினிமா உலகில் இருந்த பேரும், புழகையும் இழந்த நடிகர் ,நடிகைகள்.!

சினிமா உலகில் பிரபலமடைந்த நடிகர் நடிகைகள் பலரும்  பின்னாட்களில் ஏதோ ஒரு காரணத்தினால் சினிமா உலகை விட்டு ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போவதுண்டு அப்படி தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் தனது சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்டு சினிமா துறையை விட்டு போன பிரபலங்கள் யார் என்று தற்போது பார்ப்போம்.

1.சினிமா உலகில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன் இவரது காலகட்டத்தில் ரஜினி ,கமல் போன்ற சிறந்த ஜாம்பவான்கள் சினிமா துறையில் நடித்துக் கொண்டிருந்தாலும் அவர்களுக்கு ஈடு இணையாக வந்தவர்தான் ராமராஜன் இவர் நடித்த எங்க ஊரு பாட்டுக்காரன், வில்லுப்பாட்டுக்காரன், காவல்காரன் ,நம்ம ஊரு ராசா போன்ற படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் அத்தகைய காலகட்டத்திலேயே ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர் என்ற பெயரைப் பெற்றார்.

இவ்வாறு வலம் வந்து கொண்டிருந்த இவர் கடைசியாக நடித்த சீறிவரும் காளை, மேதை போன்ற படங்கள் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாணாதால் இதனைத் தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் எந்த ஒரு படங்களிலும் நடிக்காமல் இருந்தார் இருப்பினும் தமிழ் சினிமா இவருக்கு தொடர்ந்து பல வாய்ப்புகளை கொடுத்தாலும் நான் நடித்தால் சினிமா உலகில் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என கூறி சினிமாவில் இருந்து தற்போது வரை விலகி இருக்கிறார்.

2. 80 ,90 காலகட்டங்களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் மோகன் இவர் நடித்த பல படங்கள் தமிழ் சினிமாவில் 100 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை படைத்துள்ளது. இவர் சினிமா உலகில் அறிமுகமானதே கன்னட படங்களில் தான் அதன்பிறகு மலையாளம், தெலுங்கு என பிறமொழி பக்கம் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்த இவருக்கு தமிழில் பட வாய்ப்பு கிடைத்தது . இவர் மூடுபனி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இதனைத் தொடர்ந்து அவர் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்

அந்த வகையில் இவர் நடித்த பயணங்கள் முடிவதில்லை 500 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை படைத்தது இத்திரைப்படத்தினை தொடர்ந்து அவர் கோபுரங்கள் சாய்வதில்லை ,மௌனராகம், நூறாவது நாள், மெல்ல திறந்தது கதவு, நேரம் நல்லாருக்கு போன்ற படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தன.

சினிமா உலகில்  மோகன் அவர்கள் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வலம் வந்து இருந்தாலும் அத்தகைய படங்களில் அவரது சொந்தக் குரலில் இல்லை அவருக்கு குரல் கொடுத்தவர் எஸ். என்.  சுரேந்தர் தான்.ஆனால் இதனை மோகன் அவர்கள் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கூறதால் எஸ். என்.  சுரேந்தரை மிகவும் காயப்படுத்தின இதன் பிறகு இவர்கள் இருவருக்கும் சண்டை எழுந்தன.

அதன் பிறகுதான் மோகன் அவர்கள் சொந்த குரலிலேயே பல படங்களில் நடித்தார் ஆனால் அத்தகைய குரல் மக்களுக்கு பிடிக்காததால் அத்தகைய படங்கள் மாபெரும் தோல்வியை சந்தித்தன அதன்பின் இவர் சினிமா உலகை விட்டு காணமால்  போனார் மோகன்.

3. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா. இவர் தனது இடுப்பழகை  காட்டி பல கோடி ரசிகர்களை கவர்ந்த இவர் ஒரு படத்திற்காக தனது உடல் எடையை ஏற்றி நடித்தார் ஆனால் அதன்பிறகு தனது உடல் எடையை குறைக்க முடியாமல் படாத பாடுபட்டார் நடிகை அனுஷ்கா இதன் மூலம் அவர் ரசிகர்களையும் மற்றும் பட வாய்ப்புகளையும் இழந்து உள்ளார். தற்பொழுது சினிமாவிற்காக திக்குமுக்காடி வருகிறார்.

4. தமிழ் திரை உலகிற்கு பல காமெடியன்கள் வந்து போனாலும் அத்தகைய நிரந்தரமான இடத்தை பிடித்தவர்கள் வெகு சிலர்தான் அதில் கவுண்டமணி, செந்தில், வடிவேலு பிறகு அந்த இடத்தை நிரந்தரமாக பிடித்து இருந்தவர் சந்தானம். தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடியனாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பேரும் புகழும் சம்பாரித்து சிறப்பாக வலம் வந்து கொண்டிருந்த இவர் திடிரென இனி காமெடியனாக நடிக்க போவது இல்லை எனக்கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

பின்னாட்களில் ஹீரோவாக அடி எடுத்து வைத்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்து வந்தாலும் போயிருந்த பெயரும் புகழும் அவரால் அடைய முடியவில்லை இதனால் அவர் சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்டார் சந்தானம்.

5. தமிழ் திரை உலகில் இளம் நாயகியாக வந்து குறுகிய காலத்திலேயே பேரும் புகழும் சம்பாதித்தவர் லட்சுமிமேனன் இவர் கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் சினிமா உலகில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக வலம் வந்து கொண்டிருந்த போது திடீரென படிக்கப் போவதாகக் கூறி தனது பட வாய்ப்புகளை தவிர்த்தார் அதோடு மட்டுமல்லாமல் பெரும் புகழையும் இழுந்தார் தற்போது மீண்டும் சினிமா உலகிற்கு அடி எடுத்து வைக்க முயற்சி செய்திருக்கிறார் இருப்பினும் அவரால் அத்தகைய நிலையை எட்ட முடியாமல் தவித்து வருகிறார்.

6. ஒரு சினிமா உலகில் காமெடி என்னவென்றால் நாம் நாமத்திற்கு உடனே வருபவர் வடிவேலு அந்த அளவிற்கு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை தமிழ் சினிமா உலகில் நிலைநட்டினார் இப்படி வந்து கொண்டிருந்த இவர் அரசியல் பேச ஆரம்பித்த பின் சினிமா வாய்ப்பையும், அதன்பின் பேரும் புகழும் எல்லாத்தையும் இழந்து தற்போது பட வாய்ப்பை கைப்பற்றுவதற்காக முயற்சி செய்து வருகிறார்.

7. களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் நடித்த தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் ஓவியா அதன்பிறகு மிகச்சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைத்துக் கொண்ட இவர் திடீரென கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸில் கலந்துகொண்டு மேலும் பேரும் புகழையும் சம்பாதித்தார்.

இதனை அடுத்து வெளிவந்த அவருக்கு மக்கள் கூட்டம் அலை மோதின இருப்பினும் அதை சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல் போனதால் தற்பொழுது அவரால் அடையாளம் தெரியாமல் போயுள்ளார் ஓவியா. இவர்களைப் போன்றே தமிழ் சினிமா உலகில் பல நடிகர் நடிகைகள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment