மூன்று தலைமுறையாக சினிமாவில் துண்டு போட்டு நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகள்.!

தமிழ் சினிமாவில் மூன்று தலைமுறையாக நடித்து வரும் நடிகைகள் மற்றும் நடிகர்கள். அதாவது தமிழ் சினிமாவில் தாத்தா, மகன், பேரன், போன்று மூன்று தலைமுறையாக நடித்து வரும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் இதோ.

இந்த வரிசையில் முதலில் நடிகர் முத்துராமன் இவர் 1960 மற்றும் 1970 களில் முன்னணி நடிகராக இருந்தவர், இவர் ரஜினி, கமல், எம்ஜிஆர், சிவாஜி, போன்ற நடிகர்களுடன் துணை நடிகராக நடித்துள்ளார். இவருடைய மகன் கார்த்தி இவர் 90களில் தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார். பல திரைப்படங்களுக்கு மேலாக வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மகன் கவுதம் கார்த்திக்  இவர் தற்போதைய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

குமாரி ருக்மணி இவர் 1935 முதல் 2000ம் ஆண்டு வரை நடிகை மற்றும் குணச்சித்திர நடிகையாக இருந்து வருகிறார். இவருடைய மகள் லட்சுமி இவர் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தார். தற்போதும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவருடைய மகள் ஐஸ்வர்யா 1990கள் அது மட்டுமல்லாமல் தற்போது ஒருசில குணசித்திர வேடங்கள் மற்றும் நடிகையாக ஒரு சிலர் காலத்தில் மிகவும் பிரபலமானவராக விளங்கினார்.

சிவாஜி இவரை வந்து நம் அனைவருக்கும் தெரியும் இவர் 300க்கு மேல் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருடைய மகன்தான் பிரபு  இவர் தமிழ்,  தெலுங்கு, மலையாளம், போன்ற மொழி திரைப்படங்களில் 100 திரைப்படங்களுக்கு மேலாக நடித்துள்ளார். 90களில் ஒரு முன்னணி நடிகராகவும் இவர் திகழ்ந்தார். பிரபுவின் மகன் விக்ரம் பிரபு இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நாகேஷ் இவர் 80 90களில் மிகச் சிறந்த காமெடி நடிகர் மற்றும் குணச்சித்திர நடிகராகவும் விளங்கினார். இவருடைய மகன் ஆனந்த்பாபு இவர் 90களில் மிகச் சிறந்த நடிகர் மிகச் சிறந்த குணச்சித்திர நடிகராக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருடைய இரண்டு மகன்களும் தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் அடுத்த குடும்பம் கீர்த்தி சுரேஷ் குடும்பம் கீர்த்தி சுரேஸ் அவர்களின் அம்மா சரோஜா சுரேஷ் இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர். கீர்த்தி சுரேஷின் பாட்டி மேனகா அவர்கள் தமிழ் தெலுங்கில் முன்னணி படங்களில் நடித்துள்ளார். தற்போது கீர்த்தி சுரேஷ் அவர்கள்  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்த வரிசையில் அடுத்த குடும்பம் தன்யா அவரது குடும்பம் இவரை வந்து நாம் அனைவருக்கும் தெரியும் கருப்பன் படத்தின் நடிகையாக நடித்துள்ளார். இவருடைய தாத்தா ரவிச்சந்தர் தமிழில் 80 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர். அதுமட்டுமல்லாமல் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். இவருடைய மகன் சஞ்சய் விஷ்ணு இவர் ஒரு சில திரைப்படங்களில் தமிழில் நடித்துள்ளார். குணச்சித்திர நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இவருடைய மகள் தன்யா இவர் கருப்பன் திரைப்படம் மூலமாக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

thanya
thanya

இந்த வரிசையில் அடுத்ததாக நாகர்ஜுனா அவரது குடும்பம் இருக்கிறது. நாகர்ஜுனா இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார். இவருடைய அப்பா நக்கினி ராவ் இவர் 80 மற்றும் 90களில் தமிழ் சினிமா மற்றும் தெலுங்கு சினிமாவில் ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்துள்ளார். இவருடைய மகன் நாகார்ஜுனா இவருடைய மகன் நாக சைதன்யா  இவர் தெலுங்கில் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் அடுத்ததாக உள்ள குடும்பம் முரளி அவர்களது குடும்பம். முரளி இவர் தமிழ் சினிமாவில் ஒரு மிகச்சிறந்த நடிகர் ஆவார். இவருடைய அப்பா சுந்தர மகாலிங்கம் இவர் தெலுங்கில் பல திரைப்படங்கள் பண்ணியிருக்கார் தமிழில் ஒரு சில திரைப்படங்கள் இயக்கியுள்ளார். முரளியின் மகன் அதர்வா இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார்.

murali
murali

இவர்கள் அனைவரும் மூன்று தலைமுறையாக தமிழ் சினிமாவில் நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment