இப்போலாம் நடிப்பை விட மண்டையில இருக்க மசுருக்குதான் மவுசு..? யோகி பாபு பற்றி மேடையில் பேசிய பிரபல நடிகர்..!

பொதுவாக சினிமாவில் நடிக்கும் ஒவ்வொரு நடிகருக்கும் நடிகைக்கும் ஒரு தனித்திறமை உண்டு அந்த வகையில் சிலர் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக சிக்ஸ்பேக் வைத்து தனித்துவமாக காட்டுவார்கள் ஒரு சிலர் தன்னுடைய நடிப்பின் மூலமாக தன்னை தனியாக காட்டுவார்கள்.

இப்படி பல்வேறு நடிகர்களும் பல்வேறு குணமுடையவர்களாக இருப்பார்கள் ஆனால் இவை அனைத்திற்க்குமே அதிர்ஷ்டம் என்ற ஒன்று எப்பொழுது கதவு தட்டுகிற ஏதோ அப்போதுதான் அவர்களுக்கு வாய்ப்புகளும் புகழ்களும் குவியும்.

அந்தவகையில் அதிர்ஷ்டத்தின் மூலமாக அலப்பறை கொடுத்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் யோகிபாபு இவர் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான யோகி என்ற திரைப்படத்தின் மூலம் திரையில் அறிமுகமானார். இவ்வாறு இவர் அறிமுகமான முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி கொடுத்ததன் காரணமாக இவருடைய பெயரும் யோகி பாபு என மாறிவிட்டது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து நமது நடிகர் யோகிபாபு தில்லாலங்கடி, வேலாயுதம், தூங்காநகரம், ராஜபாட்டை, கலகலப்பு,  அட்டகத்தி, சூது கவ்வும், வீரம், சிரித்தால் ரசிப்பேன் போன்ற பல்வேறு திரைப்படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி உள்ளார்.

இவ்வாறு காமெடி நடிகராக வலம் வந்த நடிகர் யோகிபாபு தற்போது திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடிக்க ஆரம்பித்துவிட்டார் பொதுவாக யோகிபாபு என்று சொன்னாலே போதும் அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது அவருடைய ஹேர்ஸ்டைல் தான்.

இந்நிலையில் அவருடைய முடியை பற்றி மேடையில் பிரபல நடிகர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  அந்த வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு கோமாளி திரைப்படத்திற்காக யோகிபாபு சிறந்த காமெடியன் என்ற விருதை வாங்கினார் அப்பொழுது யோகி பாபுவிற்கு பரிசு வழங்க ராதாரவி மேடை ஏறிய பொழுது இப்ப கூட ஒரு தம்பி வந்தார் அவர் முடிய நல்லா வளர்த்து இருக்காரு. என்று கூறியது மட்டுமல்லாமல் மயிருக்கு இருக்கிற மரியாதை கூட நடிகருக்கு கிடையாது என்று அவர் கூறியுள்ளார்.

yogibabu--2
yogibabu–2

Leave a Comment