புதியதை கற்றுகொள்ள அதீத ஆர்வம் கொண்டவர் நடிகர் விவேக்.! கடைசியாக அவருக்கு எதில் ஆசை இருந்தது தெரியுமா.!

திரை உலகில் நாம் விவேக்கை குணச்சித்திர கதாபாத்திரங்களில் அல்லது காமெடி போன்ற பல்வேறு கதாபாத்திரங்களில் பார்த்திருக்கிறோம் ஆனால் அதையும் தாண்டி அவருக்கு பல்வேறு திறமைகள் இருந்திருக்கு என்றுதான் கூறவேண்டும்.

அதிலும் குறிப்பாக படத்தை இயக்க ஆசைப்பட்டவர் மேலும் பியானோவில் பல பாடல்களைப் பாடி அசத்தி இசைப்புயல் இளையராஜாவிடம் பாராட்டைப் பெற்றவர் என பல்வேறு திறமைகளை வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இது இப்படியிருக்க மக்களுக்கு நல்லதொரு கருத்தை சொல்லவும் சமூக அக்கறையை விதைக்கவும் அவர் உண்மையாளராக செயல்பட்டவர் விவேக்.

தற்பொழுது நம்முடன் இவர் இல்லாதது நமக்கு மிகப் பெரிய இழப்பு என்று பலரும் கூறி வருவதோடு தனது இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விவேக்கின் பல திறமைகளையும் மற்றும் அவருக்கிருந்த ஆசைகளையும் சமூக வலைதளப் பக்கத்தில் ஷேர் செய்து வருகின்றனர் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அந்த வகையில் இவர் தனது மகனுக்காக வாங்கி வைத்திருந்த பியானோவை வைத்து பல பாடல்களை பாடி கற்றுக் கொண்டார் என்பதும் தற்போது தகவல்கள் வெளிவருகின்றன.

இந்த லாக்டவுன் காலகட்டத்தில் விவேக் வீட்டில் இருந்து கொண்டு படங்களைப் பார்ப்பது, உடற்பயிற்சி செய்வது, இசைக்கருவி போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டினார். அதிலும் குறிப்பாக பியானோவில் படங்களின் பாடல்களை இசை அமைத்து செம மாஸ் காட்டினார்.

அந்தவகையில் இளையராஜாவின் பாடல்களை பாடி பியானோவில் கற்றுக்கொண்டு அந்த வீடியோவை இளையராஜாவிடம் போட்டுக் காட்டி பாராட்டு பெற்றார் மேலும் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் வெளியான ரவுடி பேபி என்ற பாடலையும் பெருமளவில் வாசித்து அவரிடமும் வாழ்த்து பெற்றார்.

இப்படி சின்ன சின்ன விஷயமாக இருந்தாலும் அதில் அதிக ஆர்வம் காட்டி தனது திறமையை வெளி காட்டியவர் விவேக் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எஸ்பிபி பாலசுப்ரமணியம் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்த நிலையில் அவருக்காக நடிகர் விவேக் கேளடி கண்மணி படத்தில் மூச்சுவிடாமல் பாடிய பாடலை நடிகர் விவேக் பியானோவில் வாசித்து அவர் மீண்டுவர பாடினார்.

Leave a Comment

Exit mobile version