இரண்டாம் பாகத்தால் அகல பாதாலத்திற்கு சென்ற விஷால்.! இந்த கூட்டனி படமாவது கைகொடுக்குமா…

சினிமா உலகில் கொடி கட்டிப் பறந்து வந்த விஷால் சமீபகாலமாக நடவடிக்கைகள் எதுவும் சரிவராமல் தேவையில்லாத பல வற்றில் மூக்கை நுழைத்து சினிமாவில் தற்போது அகல பாதாளத்திற்க்கு சென்றுவிட்டார். மேலும் இவரின் சமீபத்திய படங்கள் சொல்லும் அளவிற்க்கு வெற்றியைப் பெறாமல் இருக்கிறது.

இவரின் கடைசி திரைப்படங்களான துப்பறிவாளன், இரும்புதிரை போன்ற படங்களின் வெற்றியை தவிர வேறு எந்த ஒரு திரைப்படமும் வெற்றியை கொடுக்காமல் இருப்பதால் ரசிகர்கள் இவரை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விட்டனர்.

அதிலிருந்து மீண்டு வர வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்தால் மீண்டும் அந்த இடத்தை பிடித்து விடலாம் என கணக்குப் போட்டு துப்பறிவாளன் 2 ஆம் பாகத்தை எடுத்தார் ஆனால் இது எடுக்கும் பொழுது பல பிரச்சனைகளை இயக்குனர் மிஷ்கினும் விஷாலும் சந்தித்தனர். ஒரு கட்டத்தில் அந்த சண்டை எல்லை மீறி இருவரும் மாறி மாறி தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர்.

அதன் பிறகு இந்த 2ஆம் பாகத்தின் மீதி கதையை விஷாலே இயக்க ஆரம்பித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் படத்தைப் போட்டுப் பார்த்தால் மிஷ்கின் எடுத்ததற்கும் இவர் எடுத்தற்க்கும் படம் பொருந்தமே உள்ளதாம். அதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தை எடுத்தால் தனக்கு நஷ்டம் ஆகிவிடும் என்று கூறி படத்தை கைவிட தற்போது யோசித்துக் கொண்டு வருகிறாராம்.

thupparivaalan2
thupparivaalan2

இதை தொடர்ந்து ஆர்யா மற்றும் விஷால் இணையும் எனிமி திரைப்படத்தின் வெற்றியை அவர் பெரிதாக பார்க்கின்றார். இந்தப் படமும் வெற்றி அடையவில்லை என்றால் தலையில் துண்டுடன் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டு விடுவார் என ரசிகர்களும் பிரபலங்களும் கூறுகின்றனர்.

Leave a Comment