தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூரி இவர் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையலும் தனது காமெடியை வெளிப்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்து வருவதோடு மட்டுமல்லாமல் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்து சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவருக்கு தமிழ் சினிமா துறையில் நடித்து வரும் நடிகர்களுடன் நண்பர்களாக இருந்து வருகிறார் அந்த வகையில் இவர் சிவகார்த்திகேயன் ,விமல் போன்ற பல நடிகர்களுடன் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நடிகர் விமல், சூரி மற்றும் சிலர் கொடைக்கானல் சுற்றுலா சென்றுள்ளனர்.
அங்கு தடைசெய்யப்பட்ட பகுதியான பேரிஜம் என்னும் ஏரியில் மீன் பிடிப்பது போல புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகின இதனை அறிந்த வனத்துறையினர் தடை விதிக்கப்பட்ட பகுதியில் மீன் பிடித்ததால் விமல், சூரி உள்பட 4 பேருக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர் மேலும் இதுபோன்ற தடை விதிக்கப்பட்ட பகுதியில் அத்துமீறி நுழைய கூடாது என எச்சரித்துள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்.