இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்க மறுக்கும் நடிகர் விக்ரம்.? உண்மை முகத்தை பார்த்த தமிழ் சினிமா.? கடுப்பில் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம் ஆனால் விக்ரம் அண்மைக்காலமாக தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் சொல்லி கொள்ளும் படி மிகப் பெரிய ஒரு வெற்றி படமாக மாறவில்லை இதனால் வெற்றி கொடுக்க தற்பொழுது போராடிக் கொண்டிருக்கிறார் விக்ரம்.

இவரது கையில் பொன்னியின் செல்வன், கோப்ரா போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளிவர ரெடியாக இருக்கிறது. நடிப்பதையும் தாண்டி நீண்ட வருடங்களாக டப்பிங் கலைஞராகவும் துணை நடிகராகவும் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் குறித்து ஒரு செய்தி இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது.

அதாவது இனி இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பை கொடுக்கப்போவதில்லை என கூறப்படுகிறது மேலும் முன்னணி இயக்குனர் உடன் மட்டுமே கைகோர்த்து வெற்றியை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. இதனால் அறிமுக இயக்குனர்களும், உதவி இயக்குனர்களுக்கும் நடிகர் விக்ரமுடன் இணைவது சாத்தியமில்லை. நடிப்பையும் தாண்டி நடிகர் விக்ரம்.

வெப் சீரிஸ் ஒன்றையும் தயாரிக்க உள்ளார் அதுக்கும் அறிமுகம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கிடையாது என கூறப்படுகிறது. அப்படியே வந்தாலும் கூட கதையை மட்டும் வாங்கிக்கொண்டு அனுபவம் வாய்ந்த இயக்குனர்களை வைத்துதான் படங்களை இயக்க வைப்பார் என்ற தகவலும் வெளிவருகிறது. இப்பொழுது வேண்டுமானால் நடிகர் விக்ரம் உச்ச நட்சத்திரமாக இருக்கலாம்.

ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் நடிகர் விக்ரம் இளம் இயக்குனர்களுடன் தான் பணியாற்றி இருந்தார் ஏன் இயக்குனர் பாலா இயக்கிய சேதுபதி படத்தின் மூலம் தான் அறிமுகமானார் விக்ரம். அப்பொழுது தெரியவில்லை பாலா ஒரு அறிமுக இயக்குனர் தான் என இப்பொழுது நீங்கள் முன்னணி நடிகராக உயர்ந்த பிறகு இளம் இயக்குனர்கள் மற்றும் அறிமுக இயக்குனர்களை மட்டம் தட்டுவது சரியில்லை எனக் கூறி கமாண்ட் அடித்து வருகின்றனர் ரசிகர்கள்.

Leave a Comment