நடிகர் விக்ரம் பிரபுவிற்கே இந்த நிலமைனா!! அப்ப மத்த நடிகர்களுக்கு!! என்ன தான் விளக்கெண்னைய தடவிக்கிட்டு உருண்டாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்.

actor vikram prabhu current status: தமிழ் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விக்ரம் பிரபு ஆவார். இவர் 2012ஆம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த கும்கி திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளைக்கார துரை உட்பட இன்னும் பல படங்களில் நடித்து கலக்கி உள்ளார். இவர் முதலில் சந்திரமுகி திரைப்படத்திற்கு உதவியாக சென்னை திரும்பினார். அதற்கு அடுத்ததாக சர்வம் திரைப்படத்தின் விஷ்ணுவர்தனுக்கு உதவி தயாரிப்பாளர் ஆக பணிபுரிந்து வந்தார்.

இவர் சிவாஜி கணேசனின் பேரன் ஆவார்.எனவே பொதுவாக நடிகர்களின் பிள்ளைகளும் இவர்களுடைய பேர குழந்தைகள் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கும்  இந்நிலையில் இவர்களுக்கு முதல் திரைப்படம் நடிப்பது எளிதாக அமையும். ஆனால் அதனை தக்க வைத்துக்கொள்ள ஹார்டு வொர்க் செய்ய வேண்டும். அப்படி இவர்கள் பல படங்களில் நடித்தாலும் மக்களுக்கிடையில் நல்ல வரவேற்ப்பை பெற வேண்டும். அது குதிரை கொம்பாக தான் இருக்கும்.  இது போலவே இவருக்கு முதல் படம் கும்கி மிகப்பெரிய வெற்றியை தந்தது இவருக்கு விஜய் அவார்ட் கிடைத்தது.

ஆரம்பம் அசத்தலாக இருந்தாலும் தற்போது திரையுலகில் நிற்க நிலை என்றி  தத்தளித்து வருகிறார். இருந்தாலும் இவர் தமிழ் சினிமாவில் நம்பிக்கை தரும் நாயகனாக வலம் வருகிறார். கும்கி ,இவன் வேற மாதிரி, அரிமா நம்பி போன்ற படங்கள் இவருக்கு வெற்றியைத் தந்தது. இதன் பிறகு தான் சிக்கல் ஆரம்பித்தது மாயா ,சிகரம் தொடு, நெருப்புடா ,பக்கா உட்பட இன்னும் பல படங்கள் நடித்து நடித்து இருந்தாலும் அது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இதன் காரணமாக தற்போது விக்ரம் பிரபுவை வைத்து படம் பிடிக்கலாமா வேண்டாம் என தயாரிப்பாளர்கள் யோசிக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் வெளியாக உள்ள பொண்ணியன் செல்வன் படத்தை பெரிதாக நம்பி உள்ளார். ஆனால் இப்படத்தில் இவர் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். தற்பொழுது இவர் முதலில் கதையை தெளிவாக தேர்ந்து எடுக்க வேண்டும் என முடிவு எடுத்துள்ளார். இந்த நிலையில்  விக்ரம் பிரபு திரை உலகில்  மீண்டும் தொடர இயலுமா என்ற நிலையில் உள்ளார்.இதனைப் பற்றி இன்னும் குறுகிய காலத்தில் தெரியவரும் .

Leave a Comment