பகத் பாசிலை தொடர்ந்து லியோ படத்தில் இணையும் விக்ரம் பட நடிகர்.! இணையத்தில் தெறிக்கும் தகவல்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் படமாக்கப்பட்டு வரும் நிலையில் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாள்கள் நடித்து வருகின்றனர்.  இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் நடிக்கும் மிஷ்கின் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இவர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிவடைந்ததாக கூறப்படுகிறது.

இவர்களைத் தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சஞ்சய் தத் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது அது மட்டுமல்லாமல் சஞ்சய் தத் படப்பிடிப்பில் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலானது. இப்படி லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு பிசியாக நடந்து கொண்டு வரும் நிலையில் சஞ்சய் தத்தை தொடர்ந்து விக்ரம் படத்தில் நடித்த பகத் பாசில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாக சில தகவல் வெளியாகி இருந்தது.

இவரைத் தொடர்ந்து மேலும் ஒரு விக்ரம் படம் நடிகர் இந்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. காஷ்மீரில் படமாக்கப்பட்டு வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் படப்பிடிப்பு முடிந்தது தான் அடுத்ததாக சென்னையில் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் விக்ரம் பட நடிகர் கமல் அவர்கள் இந்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக சில தகவல் வெளியாகியிருக்கிறது.

இதனால் லியோ திரைப்படம் எல்சியு-வில் இணைய இருப்பது கிட்டத்தட்ட உறுதியாக இருக்கிறதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து லோகேஸ் கனகராஜ் அவர்கள் ஒரு அப்டேட் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment