எப்பா இந்த நடிகரா ராசியே கிடையாது என ஒதுக்கிய சினிமா.! எப்படி மீண்டு வந்தார் தெரியுமா.?

தமிழ் திரையுலகில் நடிக்க வருவதற்கு முன்பு ஒவ்வொரு நடிகருக்கும் பின்னால் ஒரு கஷ்டப்பட்ட கதை இருக்கும் அவ்வாறு பல கஷ்டங்களை தாண்டி தான் தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் விக்ரம் இவர் ஆரம்ப காலகட்டத்தில் நடித்த திரைப்படங்கள் எதுவும் சரியாக கை கொடுக்கவில்லை என்பது நமக்கு தெரிந்தது தான் அந்த வகையில் இவர் ஆரம்ப காலகட்டத்தில் கஷ்டப்பட்டதை பற்றி தற்பொழுது ஒரு தகவல் கிடைத்துள்ளது.

அதில் விக்ரம் ஆரம்ப காலகட்டத்தில் என் காதல் கண்மணி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார் இந்த திரைப்படத்தில் நடித்துக்கொண்டே ஒரு சில விளம்பர திரைப்படங்களிலும் இவர் நடித்து வந்தார் இப்படி ஒரு நிலையில் அந்த திரைப்படம் பாதையில் முடிந்திருந்த நிலையில் ஒருநாள் ஒரு சில காரணங்கள் குறித்து படம் திடீரென்று நின்றுவிட்டது.

இதனையடுத்து விக்ரம் என்ன செய்வது என்று தெரியாமல் தந்துவிட்டேன் என்னை என்ற படத்தில் நடிக்க விக்ரமிற்கு வாய்ப்பு கிடைத்து அந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.மேலும் அந்த திரைப்படத்தில் நடிக்கும் பொழுது விக்ரமை ஒரு சிலர் வேறு எந்த திரைப்படத்திலாவது நடித்தீர்களா என கேட்க அதற்கு விக்ரம் நான் நடித்த முதல் திரைப்படம் பாதியிலேயே நிற்கிறது அதனால் இந்த திரைப்படம் தான் எனக்கு முதல் திரைப்படம் என கூறியுள்ளாராம்.

அதுமட்டுமல்லாமல் திடீரென்று விக்ரம் நடித்த முதல் திரைப்படம் கூடிய சீக்கிரம் வெளியாகும் என பத்திரிகையில் விளம்பரம் வந்துவிட்டதாம் இதனால் இந்த திரைப்படத்தின் இயக்குனர் ஸ்ரீதர் விக்ரமிடம் பல கேள்விகளை கேட்கிறார் அதற்கு விக்ரம் நான் நடித்த முதல் படம் பாதியில் நின்றது அதனால் தான் நான் இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என கூறியுள்ளார்.

அவரும் பாதியில் நின்று ஒரு திரைப்படம் வெளியாகுவது எல்லாம் சகஜம் என எடுத்துக் கொண்டுள்ளார்.விக்ரம் நடித்த முதல் திரைப்படத்திற்கு முன்பே தந்துவிட்டேன் என்னை திரைப்படம் தான் வெளியானது இந்த திரைப்படம் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை அதன்பிறகு விக்ரம் நடித்த திரைப்படங்கள் வரிசையாக தோல்வியைத் தழுவியதாம்.

என்னதான் பல திரைப்படங்களில் விக்ரம் வரிசையாக தோல்வியடைந்தாலும் தனது விடா முயற்சியினால் சேது என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்த பாலா இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் சேது திரைப்படம் பல்வேறு காரணங்களைக் குறித்து பல தடைகளை தாண்டி வெளியானபோது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று ஒரு வாரத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் தயாரான பிறகு வாங்குவதற்கு யாரும் அதிக ஈடுபாடு காட்டவில்லை 65 முறை பலரிடம் இந்தத் திரைப்படத்தை போட்டு காண்பித்து எந்த வினியோகஸ்தர்களுக்கும் நம்பிக்கை வர இல்லை கதை நன்றாக தான் இருக்கிறது ஆனால் ஒரு வெற்றித் திரைப்படம் கூட கொடுக்காத கதாநாயகனை வைத்து படம் எடுத்ததால் தான் பிரச்சனை என கூறிக் கொண்டே இருந்தார்கள்.

அதனால் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஒரு கட்டத்தில் நாமே இந்த படத்தை வெளியிடலாம் என்று முடிவு செய்து பின்பு குறைந்த திரையரங்குகளில் வெளியிட்டு வெற்றிகான வைத்துள்ளார்களாம்.ஆம் பல ஆண்டுகள் கழித்து விக்ரமின் புதிய திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் ஒரு வாரத்திற்கும் மேல் திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் ஆகிவிட்டது.

sethu
sethu

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை பார்த்து விக்ரமை பாராட்டாதவர்களே இல்லை என்ற அளவிற்கு சூப்பர் ஹிட் அடித்து விட்டது மேலும் இதே போல்தான் விக்ரம் அடுத்தடுத்து திரைப்படங்களை தனது விடா முயற்சியால் பல ஹிட்டடிக்கும் திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வெற்றி காண்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சினிமாவில் நடிகர்களாக விளங்கும் பல நடிகர்களுக்கு இந்த நிலைமை வந்துள்ளது என்பது நமக்கு தெரிந்ததுதான் இதனையடுத்து இந்த தகவல் தற்போது விக்ரம் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment