அவசர அவசரமாக நடிகர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி.!

வெள்ளித்திரையில் உலக நாயகன் கமல் ஹாசன் மற்றும் ரஜினி காந்த் ஆகிய இருவருக்கும் திரைப்படங்களில் நடிப்பதில் போட்டி போட்டு மூன்றாவதாக வலம் வந்தவர் தான் விஜயகாந்த் இவர் தமிழ் சினிமாவுலகில் இவர் நடித்து ரசிகர்களிடையே மிக நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் என்றால் அது இருட்டு அறை திரைப்படத்தின் மூலம் இவர் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கினார் அதனைத் தொடர்ந்து வைதேகி காத்திருந்தாள்,ஊமை விழிகள் போன்ற திரைப்படங்களில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார்.

மேலும் இவரது நடிப்பில் வெளியான புலன் விசாரணை, சத்ரியன், சேதுபதி ஐபிஎஸ், வல்லரசு, வாஞ்சிநாதன், நரசிம்மா போன்ற பல திரைப்படங்கள் இவரது ரசிகர்களிடையே மிகவும் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாகவும் அதிகம் கல்லா காட்டியதால் இவர் திடீரென்று அரசியலில் ஈடுபட ஆரம்பித்து விட்டார்.

மேலும் இவரது நடிப்பில் இறுதியாக இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் ரசித்த திரைப்படம் தான் ரமணா இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் பேசும் வசனங்கள் அனைத்துமே இவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக திகழ்ந்து விட்டது.

இந்நிலையில் விஜயகாந்த் பற்றி ஒரு அதிர்ச்சியான தகவல் இணையதளத்தில் கசிந்துள்ளது அந்த தகவல் என்னவென்றால் சமீபத்தில் விஜயகாந்த் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம் விஜயகாந்திற்கு என்ன ஆச்சு என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்ப இவர் நடத்திவரும் முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகம் திடீரென்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் விஜயகாந்திற்கு ஒன்றும் இல்லை சாதாரண நார்மல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் அதுமட்டுமல்லாமல் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருக்கிறது என அறிக்கை வெளிவந்ததால் தற்போது இவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் உற்சாகமாக இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் பலரும் விஜயகாந்த் அரசியலில் ஈடுபடுவதோடு ஒரு சில திரைப்படங்களில் நடித்தால் மிகவும் நன்றாக இருக்கும் இவர் திரைப்படங்களில் நடித்து பல வருடங்கள் ஆகி விட்டது என கூறி வருகிறார்கள்.

Leave a Comment