விடிய விடிய மாஸ்க் அணிந்து கொண்டு பிரபலமான இடத்திற்கு தனியாக வந்த தளபதி விஜய்.!! பல வருடத்திற்கு பிறகு வெளியாகிய புகைப்படம்..

actor vijay wearing mask and came to public place rare photo viral: சாதாரண மனிதர்கள் எப்பொழுது வேணாலும் எங்க வேணாலும் செல்லலாம் அதனால் அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் கிடையாது, அதுவே கொஞ்சம் பிரபலமாகி விட்டால் ரசிகர்களின் அன்பு தொல்லையை பொறுத்துக் கொண்டுதான் இருக்க வேண்டும்.

அந்த வகையில் சமீபகாலமாக சமூக வலை தளத்தை பயன்படுத்தி எதையாவது செய்து பிரபலமடைந்து விடுகிறார்கள், தற்பொழுது உள்ள சூழ்நிலையில் பிரபலம் என்று ஆகிவிட்டாலே அவர்கள் வெளியே தனியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால் ரசிகர் கூட்டம் பிரபலத்தை சூழ்ந்து பெரிய தள்ளுமுள்ளு ஏற்படும். அதனால்தான் பல சினிமா நடிகர்கள் வெளியே சென்றால் பாதுகாப்புடன் தான் செல்வார்கள்.

இந்தநிலையில் விஜய் பல வருடத்திற்கு முன்பு வெளியாகிய கத்தி திரைப்படத்தை முதல் காட்சியை பார்க்க திரையரங்கம் வந்துள்ளார், அங்கு வந்த விஜய்யின் 3 ரசிகர்கள் மட்டுமே விஜயை அடையாளம் கண்டுள்ளார்கள்.

அப்பொழுது அந்த ரசிகர்கள் விஜயுடன் சில புகைப்படங்களை எடுத்துள்ளார் அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள். பல வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் என்றாலும் தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக வருகின்றன.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment