தளபதி 67-க்காக இதிலிருந்து விலகுகிறேன் என அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்.! வெளிவந்த அதிர்ச்சி தகவல்..

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் தற்பொழுது விரைவில் ‘தளபதி 67’ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்குவார் என்பது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் அதிகாரமுடன் காத்து வருகிறார்கள்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் கடந்த 10 நாட்களுக்கு முன்பே தளபதி 67 திரைப்படத்திற்கான கதையை எழுத தொடங்கிவிட்டார் என அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படம் திரில்லர் திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தொடர்ந்து தனது அடுத்தடுத்த திரைப்படங்களின் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். மேலும் தற்பொழுது இவர் வாரிசு திரைப்படத்தில் நடித்த வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தில் இதற்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தளபதி இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் புதிய திரைப்படத்தில் தளபதி விஜய் நடிக்க இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் தற்காலிகமாக சமூக வலைதளங்கள் அனைத்திலிருந்தும் விலகுவதாகவும் விரைவில் தனது புதிய திரைப்படத்தினை பற்றிய முறையான அறிவிப்பு வெளிவரும் என்று கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்திவுள்ளது. தளபதி 67 படத்தின் திரைக்கதையை மிகவும் அருமையாக உருவாக்க வேண்டும் என்பதற்காக முழு வீச்சில் செயல்பட இருக்கிறார். காரணமாகத்தான் சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக கூறியுள்ளார். இந்நிலையில் ‘தளபதி 67’திரைப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Comment