ஒரே மாதத்தில் நறுக்கென நாலு திரைப்படத்தை வெளியிடும் நடிகர் விஜய் சேதுபதி..! விழி பிதுங்கிய ரசிகர்கள்..!

actor vijay sethupathi continually released four movies : தன்னுடைய  வித்யாசமான நடிப்பின் மூலமாக ஏகத்திற்கு ரசிகர் கூட்டத்தை திரட்டியவர்தான் நடிகர் விஜய் சேதுபதி பொதுவாக நடிகர் விஜய் சேதுபதி பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மிகவும் வித்தியாசமாக இருப்பது மட்டுமல்லாமல் அவை தாய்மார்களை எளிதில் கவர்ந்து விட்டது இதனாலே பல தாய்மார்களும் இவரை எங்கள் வீட்டுப்பிள்ளை என்று கூற ஆரம்பித்து விட்டார்கள்.

அது மட்டுமில்லாமல் சினிமாவில் தனக்கு இப்படி ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் சரி அதற்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்கொண்டு மிக சிறப்பாக நடித்து கொடுப்பது மட்டுமல்லாமல் அந்த கதாபாத்திரமாகவே விஜய் சேதுபதி மாறிவிடுவார் அந்த வகையில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து பல வெற்றிகளை கண்டவர்.

மேலும் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் ஹிந்தி போன்ற பல்வேறு மொழிகளில் நடித்து வரும் நமது நடிகர் திரைப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் திரைப்படம் தயாரிப்பது பாடல் பாடுவது நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர்.

இவ்வாறுபிரபலமான நமது நடிகர் இந்த இடத்திற்கு எளிதில் வரவில்லை தன்னுடைய கடின உழைப்பாலும் தன்னுடைய திறமையாலும் தான் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நமது நடிகர் தற்போது துக்ளக் தர்பார்,லாபம், அனபெல் சேதுபதி, மாமனிதன், கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளிர்,  இடம் பொருள் ஏவல் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடிகர் விஜய் சேதுபதி ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நடித்திருக்கும் துக்ளக் தர்பார் திரைப்படம் ஆனது செப்டம்பர் 10-ஆம் தேதி இணையத்தில் வெளியாக உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

மேலும் இதை தொடர்ந்து அவர் நடித்த லாபம் என்ற திரைப்படமும் செப்டம்பர் ஒன்பதாம் தேதி வெளியாக உள்ளது இதை தொடர்ந்து இன்னும் இரண்டு மூன்று படங்களும் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

vijay sethupathi.
vijay sethupathi.

Leave a Comment