6 வருடத்திற்கு முன்பே ரசிகர்களுடன் ரசிகராய் படம் பார்த்த விஜய்!! இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்..

actor vijay in kaasi theater photo viral:தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நட்சத்திரமாக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகர் விஜய், இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். இவர் பொதுவாக மிகவும் சிம்பிளாகவும் மற்றும் அமைதியானவர் என்பது நாம் அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் தற்போது இவர் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்லார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் லாக் டவுன் முடிந்தவுடன் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது லாக் டவுனால் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த ரசிகர்கள்  அவர்களுக்கு பிடித்த நடிகர்களை பற்றிய புதிய அப்டேட்களை இணையதளத்தில் வெளியிட்டு வந்தார்கள். அந்த வகையில் விஜய் மாஸ்க் அணிந்து கொண்டு அதிகாலையில் கத்தி திரைப்படம் வெளியான போது 6 வருடத்திற்கு முன் திரைப்படத்தை பார்ப்பதற்காக ஃபேமஸான காசி தியேட்டருக்கு நடந்து சென்றுள்ளார்.

இதனை விஜய் ரசிகர்கள் மூன்று பேர் பார்த்து விஜய் என்று கண்டுபிடித்து போட்டோ எடுத்துக்கொண்டார்கள். அந்த புகைப்படத்தை தற்போது இணையதளத்தில் வெளியிட்டு அதனை மீண்டும் ஞாபகப் படுத்தும் வகையில் அந்த மூன்று ரசிகர்களில் ஒருவர் இன்று விஜய் சாருடன் புகைப்படம் எடுத்த நாள் என்று குறிப்பிட்டு இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

பொதுவாக பிரபலங்கள் சாதாரணமாக வெளியில் செல்ல முடியாது. ஏனென்றால் ரசிகர்கள் அவர் போகுமிடத்தில் சுற்றி சூழ்ந்த விடுவார்கள். இந்த நிலையில் விஜய் சாதாரணமாக நடந்து சென்றது விஜய்யின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

Leave a Comment