அம்மாவின் காலுக்கடியில் அமர்ந்து லியோ ஸ்டைலுடன் போட்டோ ஷூட் நடத்திய விஜய்.! எதிர்பாராத சர்ப்ரைஸ்..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியினை கண்டு வருகிறது. அந்த வகையில் இவருடைய இயக்கத்தில் தற்பொழுது விஜய் லியோ திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்முடன் காத்து வருகின்றனர். நடிகர் விஜய்யும் அதிக ஆர்வத்துடன் நடித்துவரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் நடிகர் விஜய் புது ஸ்டைலில் நடித்து வரும் நிலையில் தொடர்ந்து இந்த படத்தின் அப்டேட்டுகளும் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை எகிற வைத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நடிகர் விஜய்யின் ஃபோட்டோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது சமீப காலங்களாகவே நடிகர் விஜய் தனது தாய் தந்தையை சரியாக மதிக்கவில்லை என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஆனால் விஜயின் அம்மா சோபா அப்படியெல்லாம் கிடையாது என பல பேட்டிகளிலும் பதில் கூறி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் தனது அம்மாவுடன் லியோ லுக்கில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்தப் புகைப்படத்தில் அவரின் அம்மா சோபாவில் அமர்ந்திருக்க விஜய் அவர் காலுக்கடியில் உட்கார்ந்து இருக்கிறார்.

அப்பொழுது தனது மகனை சந்தோஷத்துடன் சோபா பார்க்கும் நிலையில் அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீப பேட்டி ஒன்றில் சோபா விஜய் தனியாக பார்த்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டதாக கூறியிருந்த நிலையில் எனவே இதனை தெரிந்துக் கொண்ட விஜய் தனது அம்மாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.

மேலும் எஸ்.ஏ சந்திரசேகர் மற்றும் சோபா இருவருடைய 50வது திருமண நாளை கொண்டாடி இருக்கின்றனர். எனவே தனது அம்மாவை தேடிச்சென்று வாழ்த்துக்களை கூறிவிட்டு அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் ஆனால் அதில் எஸ் ஏ சந்திரசேகர் இடம்பெறவில்லை என்பதனால் இன்னுமும் தந்தையின் மீது விஜய் கோபமாக இருப்பதாக கருத்துக்கள் கூறி வருகின்றனர்.

VIJAY MOTHER
VIJAY MOTHER

Leave a Comment