சரியான கூட்டணியுடன் கைகோர்த்த துருவ் விக்ரம்..! இனிதான ஆட்டம் ஆரம்பம்..!

actor thuruv vikaram latest movie update: திரைப்படத்துக்காக தனது கெட்டப்பை முற்றிலுமாக மாற்றி நடிக்கும் நடிகர்களில் தலைசிறந்தவர் தான் விக்ரம். இவர் அந்நியன், ஐ போன்ற திரைப்படங்களில் மிகவும் மோசமாக தனது கெட்டப்பை மாற்றியிருப்பார். தற்போது அவரைப்போலவே தனது மகனை எப்படியாவது திரை உலகில் வளர்த்துவிட வேண்டும் என அயராது பாடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் தன்னுடைய வடிக்கையான இயக்குனரை வைத்து வர்மா எனும் திரைப்படத்தில் தனது மகனை நடிக்க வைத்து அழகு பார்க்கலாம் என்று நினைத்த விக்ரமின் கனவு கனவாகவே மாறிவிட்டது.

இந்நிலையில் ஒரு புது இயக்குனரை வைத்து ஆதித்யா வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் துருவ் விக்ரம். இந்நிலையில் துருவ் விக்ரம் வேறு ஒரு திரைப்படத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது..

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தை தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன் திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் தான் இயக்க போகிறாராம். மேலும் இந்த திரைப்படத்தை பா ரஞ்சித் தான் தயாரிக்க போகிறாராம். மேலும் இந்த திரைப்படத்தின் கதை ஆனது முழுக்க முழுக்க விளையாட்டை அடிப்படியாக வைத்து எடுக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இவ்வாறு வெளிவந்த செய்தியில் மூலமாக இந்த திரைப்படத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்தது மட்டுமல்லாமல் துருவ் விக்ரமிற்கு இது சினிமாவில் மற்றொரு என்ட்ரியாக இருக்கும்.  என பலரும் கூறி வருகிறார்கள்.

ranjith
ranjith

Leave a Comment