கேரளாவில் கூட்டம் கூட வைத்த நடிகர் சூர்யா..! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சூர்யா இவர் சமீபத்தில் ஞானவேல் இயக்கத்தில் தெய்வம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் ஒரு தரப்பு சமுதாயத்தினரை இழிவுபடுத்தியதன் காரணமாக பல்வேறு சர்ச்சைக்கு உள்ளாகியது.

இவ்வாறு உருவான என்ற திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படமானது வருகின்ற பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த இரண்டு திரைப்படங்கள் முடிவடைந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் தங்கவேலு இயக்கத்தில் சூர்யா ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக சமூக வலைதளப் பக்கத்தில் அரசல் புரசலாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இவ்வாறு தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் சூர்யா  தற்போது தன்னுடைய ஆசை மனைவியுடன் கேரளாவில் தங்கி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் அடிக்கடி கேரளாவில் இருக்கும் பொழுது புகைப்படங்கள் இணையத்தில் வெளியேற்றம் செய்து வருகிறார்கள்.

மேலும் சூர்யா கேரளாவில் காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள ரசிகர்கள் சூர்யாவை சூழ்ந்துள்ளது மட்டுமில்லாமல் அவர் காரில் அமர்ந்து கொண்டே ரசிகர்களிடம் உரையாடி உள்ள அந்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி உள்ளது.

Leave a Comment

Exit mobile version