பார்ட் 2 படத்தின் முலம் கே வி ஆனந்துடன் இணையும் சூர்யா.! இந்த படத்தின் இரண்டாம் பாகமா அப்போ வேற லெவல்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா சமீபகாலமாக சரியான வெற்றி படங்களை கொடுக்காததால் தற்பொழுது வெற்றிக்காக ஏங்கி தவித்து வருகிறார் சூர்யா. இவர் கடைசியாக நடித்த காப்பான் கேவி ஆனந்த் படம் என்பதால் மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது இருப்பினும் படம் வெளிவந்து தோல்வியை தழுவியது.

இதனை அடுத்து அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இப்படம் சமீபத்தில் வெளிவந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது இப்படத்தினை இயக்குனர் ஹரியுடன் அருவா என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் கே வி ஆனந்த் அவர்கள் மீண்டும் சூர்யாவை வைத்து படம் இயக்கப்போகிறார் என்றும் இதனை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது என்றும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இருப்பினும் படக்குழுவினரிடம் எந்த ஒரு தகவலும் வெளிவராத நிலையில் லாக்டோன் முடிந்தவுடன் அறிவிக்கப்படும் என தற்பொழுது கூறப்படுகிறது இதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது ஏற்கனவே கேவி ஆனந்த் அவர்கள் சூர்யாவை அயன், மாற்றான், காப்பான் போன்ற மூன்று படங்களை இயக்கிய நிலையில் தற்போது அவருடன் நான்காவது படத்தில் கைகோர்க்க உள்ளார்.

கே .வி. ஆனந்த் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த அயன் படம் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றது இதனைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது தற்பொழுது சூர்யா அவர்கள் சூரரைப்போற்று படத்தை தொடர்ந்து ஹரி இயக்கத்தில் அருவா மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் போன்ற போன்ற படங்களில் நடித்து முடித்த பின்பு அவர் கே வி ஆனந்த் அவர்களுடன் இணைவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

சூரரைப்போற்று படத்தை தொடர்ந்து சூர்யா அவர்கள் முன்னணி இயக்குனர்களின் படத்தில் நடிக்க உள்ளார் இதன் முலம் அவர் தொடர் வெற்றியை பெறுவார் என்பதில் சந்தேகம் இல்லை என கூறப்படுகிறது இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.

Leave a Comment