கலைஞர் பேரனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகர் சூர்யா – ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்.

நடிகர் சூர்யா தமிழில் தொடர்ந்து வித்தியாசமான படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் கடைசியாக சூரரைப்போற்று என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அதை தொடர்ந்து தற்போது பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.

அந்த வகையில் சூர்யா நடிப்பில் முதலாவதாக ஞானவேல் இயக்கத்தில் உருவான ஜெய்பீம் என்ற திரைப்படம் வருகின்ற தீபாவளி அன்று OTT தளத்தில் வெளியாக இருக்கிறது. அதன் பிறகு நடிகர் சூர்யா டாப் இயக்குனர்கள் என்ற அந்தஸ்தை வைத்திருக்கும் பிரபலங்களுடன் இணைய இருக்கிறார். அந்த வகையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் பாண்டிராஜ்வுடன் தற்போது பணியாற்றி வருகிறார்.

அதன் பின் இவர் வெற்றிமாறனுடன் ஒரு படம் பண்ணுகிறார். மேலும் சிறுத்தை சிவாவுடன் ஒரு படம் பண்ண இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சினிமாவில் இப்படி ஒரு பக்கம் தனது படங்களில் நடித்து வந்தாலும் மறுபக்கம் 2D எண்டர்டெயின்மெண்ட் என்ற பெயரில் பல்வேறு சிறப்பான படங்களை தயாரித்து வருகிறார்.

இதனால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக தற்போது நடிகர் சூர்யா உரு மாறி உள்ளார். அவருடைய சமூக அக்கறையோடும் அவ்வப்போது தன்னை ஈடுபடுத்துவதால் ரசிகர்களையும் தாண்டி பலரும் சூர்யாவை நேசிக்கின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பா அவர்கள் நடிகர் சூர்யாவுடன் சமீபத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

surya and inpa
surya and inpa

Leave a Comment