குக் வித் கோமாளி புகழ் மீது கோபத்தில் இருக்கும் “நடிகர் சூரி” – ஒன்றை லட்சம் போச்சே..

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவரான சூர்யா சமீபகாலமாக சிறந்த கதைக்களம் உள்ள திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த சூரரைப் போற்று, ஜெய்பீம் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வந்தன. இந்த நிலையில் தற்போது நடிகர் சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் ரசிகர்கள் மத்தியில் சூர்யா திரைப்படம் என்றாலே ஒரு கருத்து உள்ள படமாக இருக்கும் என்ற பெயர் உள்ளது. அந்த வகையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படமும் நல்ல கதை களத்துடன் அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றனர். மேலும் சூர்யா நடிப்பில் உருவான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வருகின்ற மார்ச் 10ஆம் தேதி கோலாகலமாக திரையரங்கில் வெளியாக உள்ளது.

இந்த திரைப்படம் தமிழை தவிர தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் போன்ற ஐந்து மொழிகளிலும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா மோகன், சத்யராஜ், போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். அந்த வகையில் காமெடி நடிகராக இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி இணைந்துள்ளார்.

மேலும் தற்போது புதுமுக காமெடி நடிகராக பல முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் நடித்து அசத்தி வரும் விஜய் டிவி புகழும் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் கடந்த வாரம் சன் டிவியில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் ஸ்பெஷல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இயக்குனர் பாண்டிராஜ், பிரியங்கா மோகன், சூரி, புகழ் போன்ற பல பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

அப்போது சூரி, புகழ் குறித்து படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு சம்பவம் பற்றி கூறியுள்ளார். இந்த படத்தின் சூட்டிங் ஒரு பெரிய பிரம்மாண்ட வீட்டில் நடைபெற்று வந்தது அங்கு புகழ் கடைசி நாள் ஷூட்டிங் அன்று சூரியிடம் அங்கு ஒரு பெரிய நீச்சல் குளம் இருக்கிறது அங்கு நாம் வீடியோ ஷுட் செய்யலாம் எனக் கேட்டுள்ளார் அதற்கு சூரி முதலில் மறுத்து பின்பு சரி ஓகே என சொன்னார். மேலும் புகழ் போனை தண்ணீருக்குள் வைத்து ஷூட் செய்வோம் என கூறியிருந்தார்.

அதற்கு சூரி முதலில் தயங்கி பின்பு ஓகே என சொன்னார் அந்த நிலையில் சூரியின் போன் தண்ணீருக்குள் விழுந்து விட்டது பின்பு புகழின் போனும் தண்ணீருக்குள் விழுந்து விட்டது. அதனால் பின்பு இருவரின் போனும் வேலை செய்யவில்லையாம் இதில் சோகமான விஷயம் என்னவென்றால் சூரிய ஆறு நாட்கள் முன்புதான் புதுசாக ஒன்றரை லட்சம் மதிப்புள்ள அந்த போனை வாங்கினாராம். அதனால் சூரி புகழிடம் உன்னால தாண்டா என் ஒன்றரை லட்சம் போன் போச்சு என சிரித்துக்கொண்டே கூறினாராம் இந்த செய்தி தற்போது இணைய தள பக்கத்தில் பேசுபொருளாக பார்க்கப்பட்டு வருகின்றன.

Leave a Comment