இது என்ன சத்திரமா உங்க இஷ்டத்துக்கு வர.. காதலி கேட்ட ஒரே கேள்வி.. இன்று வரை மூடி கிடக்கும் எஸ்.ஜே சூரியாவின் இதயம்..

S.J. Surya: இயக்குனர் எஸ்.ஜே சூர்யா சினிமாவில் அசுர வளர்ச்சி அடைந்திருந்தாலும் இதுவரையிலும் இவருக்கு திருமணம் நடைபெறவில்லை என்பது மிகப்பெரிய வருத்தத்தை அளிக்கிறது. தன்னுடைய வாழ்வில் நடந்த சம்பவம் குறித்து சமீப பேட்டியில் எஸ்.ஜே சூர்யா பகிர்ந்துள்ளார். அஜித்தின் வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எஸ்.ஜே சூர்யா.

தொடர்ந்து அடுத்தடுத்து சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தார் ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிக்க தொடங்கிய எஸ்.ஜே சூர்யாவின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியது. எனவே தற்போது வரையிலும் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

தளபதி 68ல் வில்லி நடிகையை தூக்கி போட்ட வெங்கட் பிரபு..! அடேங்கப்பா இவங்க ஸ்டார் நடிகரையே அலற விட்டவங்களாச்சே..

அந்த வகையில் கடைசியாக விஷால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த மார்க் ஆண்டனி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இப்படத்தில் இவருடைய கேரக்டர் பாராட்ட பட்டது மேலும் மார்க் ஆண்டனி படத்தை தொடர்ந்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் மாஸ் காட்டினார்.

சமீப காலங்களாக வெற்றினை தந்து வரும் எஸ்.ஜே சூர்யா தனது உண்மையான காதல் கதையை பற்றி சமீப பேட்டியில் தெரிவித்துள்ளார். அதாவது இரவு விருந்துக்கு என் காதலி ஏற்பாடு செய்திருந்தார் அந்த நேரத்தில் தான் ஒரு பெரிய தயாரிப்பாளர் இடமிருந்து எனக்கு போன் வந்தது இப்போது நான் ஃப்ரீயாக இருக்கேன் உடனே பேச வாங்க என்று கூறினார். நான் உடனே என் காதலியிடம் அவசரமான வேலை இருக்கிறது என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டேன்.

பழியை தூக்கி கரிகாலன் மீது போட்ட வாசு.. குடும்பப் பெண்களின் பலத்தை உடைக்க குணசேகரன் போட்ட திட்டம்… எதிர்நீச்சல் இன்றைய ப்ரோமோ

இரவு 12 வரை மீட்டிங் இருந்தது அதை முடித்துவிட்டு காதலியின் வீட்டிற்கு சென்று கதவை தட்டினேன் அப்பொழுது அவள் இது ஒன்றும் சத்திரம் இல்லை என்று சொல்லி முகத்தில் அடித்தது போல் கதவை மூடிவிட்டார். அப்பொழுது மூடப்பட்ட என் இதயம் இப்பொழுது வரை மூடியே இருக்கிறது என்று தனது வாழ்க்கையில் நடந்த காதல் தோல்வி குறித்து பேசி உள்ளார்