“டாக்டர்” படத்தை முதல் நாள் படக்குழுவினருடன் வந்து திரையரங்கில் பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் – புகைப்படத்தை வெளியிட்ட திரையரங்க உரிமையாளர்.

சினிமா உலகில் எடுத்தவுடனேயே மக்கள் மற்றும் ரசிகர்களை ஒரு நடிகர் கவர்வது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல ஆனால் அதை சீரும் சிறப்புமாக ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையிலும் செய்து காட்டி வருபவர்தான் நடிகர் சிவகார்த்திகேயன். மக்கள் எப்படிப்பட்ட படம் எதிர்பார்க்கிறார்கள் என்பதை நன்கு உணர்ந்து உள்ளார்.

சிவகார்த்திகேயன் கதையை நன்கு அறிந்து காமெடி கலந்த ஆக்ஷன் மற்றும் காதல் திரைப்படங்களாக தான் இதுவரை கொடுத்து வந்துள்ளன அதனாலேயே அவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றுக்கும் மக்கள் கூட்டம் அதிகரிப்பதோடு அவரது திரைப்படங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு வசூல் வேட்டை நடத்துகின்றன.  சிவகார்த்திகேயன் கடைசியாக எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் நடித்தார்.

அது சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதை தொடர்ந்து முதன்முறையாக நெல்சன் திலிப்குமார் உடன் கூட்டணி அமைத்து டாக்டர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அண்மையில் இந்த படத்தின் படத்தின் பாடல் மற்றும் டிரைலர் ஆகியவை வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர்களை துள்ளலான போட வைத்த நிலையில்  இந்த திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி கோலாகலமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் டாக்டர் திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினர் இணைந்து ஒன்றாக படத்தை திரையரங்கில் பார்த்து கொண்டாடினர். இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழு வெற்றி தியேட்டரில் வந்து பார்த்தனர் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை திரையரங்க உரிமையாளர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

டாக்டர் படத்தை  பார்த்த ரசிகர்கள் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்ச்சனம் கூறி வருகின்றனர் ஓரளவுக்கு நல்லதொரு விமர்சனத்தை பெற்று வருவதால் மக்கள் கூட்டம் தற்போது படத்தை பார்த்து கொண்டாட ரெடியாக இருக்கின்றனர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment