சூப்பர் ஸ்டாருக்காக விட்டுக் கொடுத்த சிவகார்த்திகேயன்.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த காமெடி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி தனது விடா முயற்சியினாலும் சிறந்த நடிப்பிலும் தற்பொழுது வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகும் பொழுது பலர் இவரைப் பார்த்து கிண்டல் செய்தார்கள்.ஆனால் அனைவருக்கும் வாயடைக்கும் அளவிற்கு சினிமாவில் உயர்ந்துள்ளார். அந்த வகையில் தற்போது இவர் டாக்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படம் தியேட்டரில் மே மாதத்தில் ரம்ஜான் விடுமுறையில்  ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது கொரோனா தாக்கம் அதிகரித்ததால் தியேட்டரில் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது இந்நிலையில் ஓடிடிவியில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்து சரியான தகவல் இன்னும் வெளிவரவில்லை.இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தை இயக்குவதற்காக பிரபல இயக்குனர் ஒருவரை பல மாதங்களாக அணுகி வந்தார். ஆனால் தற்பொழுது என்னை விடவும் உங்களுக்கு ஒரு நல்ல நடிகரை வைத்து திரைப்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தால் அதனை முடித்துவிட்டு என் திரைப்படத்தை இயக்குங்கள் என்று கூறியுள்ளார் இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் இளசுகளின் மனதை கொள்ளையடித்த திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இத்திரைப்படத்தை தேசிங்கு பெரிய சாமி இயக்கியிருந்தார். இத்திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால் சிவகார்த்திகேயன் தேசிங்கு பெரியசாமியை தனது திரைப்படத்தில் இயக்குமாறு கூறியிருந்தார்.

இந்நிலையில் ரஜினி அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து இந்த வருடத்திற்குள் இரண்டு திரைப்படங்களில் நடிக்க உள்ளார். எனவே ரஜினியை வைத்து இயக்க அதிக வாய்ப்பு உள்ளது .எனவே சிவகார்த்திகேயன் ரஜினி உங்கள் படத்தில் கமிட் ஆனால் அவரின் படத்தை இயக்கி விட்டு பிறகு என் படத்தை இயக்குங்கள் என்று கூறியுள்ளார்.

Leave a Comment