சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பாக விஜய் டிவியில் நடிகர் சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

தமிழ் திரையுலகில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகர்கள் நடிகைகள் ஏராளம் ஆனால் அதில் அனைவரும் சாதித்தார்கள் என்றால் அது சந்தேகம்தான் அந்த வகையில்  சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வரும் நடிகர்களுக்கு முன்னோடியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் தற்போது வெள்ளித்திரையில் மிகப்பிரபலமான நடிகராகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருவது மட்டுமல்லாமல் தற்போது அஜித் விஜய் போன்ற பிரபலமான நடிகர்களுக்கு இணையாக வளர்ந்து விட்டார். அதுமட்டுமில்லாமல் தற்போது இவருடைய ரசிகர் கூட்டம் பெருகியது மட்டுமல்லாமல் இவருடைய திரைப்படங்களும் ஹிட்டுக் கொடுக்க ஆரம்பித்து விட்டது.

பொதுவாக நடிகர் சிவ கார்த்திகேயனை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே மிகவும் பிடிக்கும். எனவே மிகவும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்ததுமட்டுமல்லாமல்  அவை மக்களுக்கு பிடிக்கும் வகையில் இருப்பதன் காரணமாக இவருடைய திரைப்படங்கள் வெற்றி பெற்று வருகிறது.

பொதுவாக மற்ற நடிகர்களின் திரைப்படங்களை காட்டிலும் குடும்பத்துடன் சென்று பார்க்க கூடிய ஒரு நடிகர் திரைப்படம் என்றால் அது சிவகார்த்திகேயன் திரைப்படம் மரகதநாணயம் ஏனெனில் இவருடைய திரைப்படங்கள் குடும்பத்தினர் அனைவரும் பார்க்கும் அளவிற்கு கதையம்சம் உடையதாக இருக்கும்.

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் சிகரெட் மற்றும் தண்ணி அடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க மறுப்பு தெரிவிப்பது மட்டுமல்லாமல் அவருடைய திரைப்படத்தில் இந்த காட்சிகள் இருக்கவே இருக்காது.

இதனால்தான் சிவகார்த்திகேயன் மார்க்கெட் எகிறியது என பலரும் கூறி வருகிறார்கள். நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பல கோடிக்கு அதிபதியாக இருந்தாலும் ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்த நிலைக்கு வந்துள்ளார். அந்த வகையில் முதன் முதலாக சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக தான் தன்னுடைய பணியை தொடங்கினார்.

அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியது மட்டுமல்லாமல் அந்த நிகழ்ச்சிகளில் காமெடி செய்வதில் சிவகார்த்திகேயன் அடித்துக் கொள்ள யாருமே கிடையாது. அந்த வகையில் நமது நடிகர் விஜய் டிவியில் ஆரம்பத்தில் பயணித்த போது அவர் வாங்கிய சம்பளம்  வெறும் 2000 ரூபாய் தான் இதனை கேட்ட அவர்களுடைய ரசிகர்கள் மனம் நொந்து போய் விட்டார்கள்.

sivakarthikeyan-1
sivakarthikeyan-1

Leave a Comment