மக்களுடன் மண் தரை படுக்கையில் நடிகர் சிம்பு.! இணையதளத்தில் தாறுமாறாக வலம் வரும் புகைப்படம்.!!

குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்து பின்பு பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் தான் சிம்பு இவர் தமிழில் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்ததன் மூலமாகவே ஏராள ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கிறார்.

இவரது நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான ஈஸ்வரன் என்ற திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் நல்ல வசூலைப் பெற்றிருந்தது.

மேலும் சிம்பு இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா,பிரேம்ஜி, கருணாகரன்,சந்திரசேகர்,பாரதிராஜா,மனோஜ் பாரதிராஜா போன்ற பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள்.அதுமட்டுமல்லாமல் மாநாடு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக EVP City ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது இதனையடுத்து இந்த படத்திற்கான இறுதிகட்ட படப்பிடிப்பு நேற்று இரவு படமாக்கும் பொழுது சிம்பு அங்குள்ள மக்களுடன் ஒன்றாக மண் தரையில் படுத்து தூங்கியுள்ளார் அதற்கான புகைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் சிம்புவின் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தால் இப்படி தூங்குவார் என இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version