மீண்டும் டைம் லூப்பில் சிக்கிக்கொள்ளும் நடிகர் சிம்பு..! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் மாநாடு இரண்டாம் பாகம்..!

சினிமாவை பொருத்தவரை ஒரு திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்துவிட்டால் அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் ஏக்கத்துடன் இருப்பது வழக்கம்தான் அந்த வகையில் பல்வேறு திரைப்படங்கள் இரண்டாம் பாகத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் கூட லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படமானது மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த திரைப்படத்தின் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் தற்போது மிக பிரம்மாண்டமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான மாநாடு திரைப்படத்தில் இரண்டாம் பாகத்திற்கு தேவையான காட்சிகள்  இருக்கிறதாக கூறப்படுகிறது. அந்தவகையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக சமூக வலைதள பக்கத்தில் பேச்சு அடிபட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் டைம் லூப்அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது மேலும் இந்த திரைப்படத்தில் அப்துல் காலிக் என்ற கேரக்டரில் நடித்துள்ள சிம்பு அவருடைய நண்பர்கள் யாருக்காவது பிளட் டொனேஷன் செய்தால் அவர்களுக்கும் இந்த சக்தி கிடைத்து விடுகிறது.

அந்த வகையில் இதை உறுதி செய்யும் முறையில் மாநாடு திரைப்படத்தில் எடிட்டர் படத்தின் முடிவில் இருக்கும் டீசரை மிஸ் பண்ணி விடாதீர்கள் என்று கூறியது மட்டுமில்லாமல் மாநாடு 2 என்ற ஹேஸ்டேக்கையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.

பொதுவாக தமிழ் சினிமாவில் முதல் பாகம் வெற்றியடைந்ததை தொடர்ந்து இரண்டாம் பாகம் வெற்றி அடையும் என்றால் அது சாத்தியம் கிடையாது ஏனெனில் பல திரைப்படங்கள் தோல்வி அடைந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்நிலையில் டைம் அடிப்படையில் இந்த திரைப்படம் உருவாக்குவதன் காரணமாக இந்த திரைப்படம் கண்டிப்பாக வெற்றி அடையும் என படக்குழுவினர்கள்  எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

manadu-2-1

Leave a Comment

Exit mobile version