திருட்டு பய போல இருந்த என்னிடம் அஜித் மிகவும் எளிமையாக நடந்து கொண்டார்.!என கூறி மனம் நெகிழ்ந்த சென்றாயன்!

Actor senrayan speaks about ajith: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தல அஜித். அஜித் அவர்கள் தனது சிறந்த நடிப்பின் மூலம் மக்கள் மற்றவர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார். அதுமட்டுமில்லாமல் தனது நிஜ வாழ்க்கையிலும் நேர்மையாக நடந்து கொள்வதால் தமிழ்நாட்டு ரசிகர்கள் மட்டும் பிடித்துப்போன நபராக இல்லாமல் உலகளவில் உள்ள ரசிகர்களுக்கும் பிடித்துப் போன நபராக திகழ்ந்து வருகிறார் தல அஜித்.

அந்த வகையில் திரை உலகங்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பாராட்டி உள்ளதை நாம் அறிந்துள்ளோம். அந்த வகையில் தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் வில்லன் போன்ற பல்வேறு வேடங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சென்றாயன் பிரபலமானவர்.  இவர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமடைந்தார் என்பது குறிப்பிடதக்கது.

தற்போது அவர் ஒரு சில படங்களில் நடிக்க உள்ளார் இந்தநிலையில் தல அஜித் அவர்களை பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியது ஒருமுறை ரோகினி காம்ப்ளக்ஸில் அஜித் சார் உடைய படத்தின் சூட்டிங் நடந்து வந்தது அப்போது காக்கி நிற காரில் செக்கச்செவெலென எம்ஜிஆர் மாதிரி வந்து இறங்கினார். அவரைப் பார்த்ததும் நான் சார் எனக்கு ஏதாவது வேலை இருந்தா குடுங்க என கேட்டேன்.

அப்போது என்னுடைய வீட்டுக்கு வாங்க என முகவரியை சொன்னார். நான் கீழே இருந்த ஒரு சிகரெட் அட்டையை எடுத்து மீண்டும் முகவரி கேட்ட பொழுது சிரமமில்லாமல் அவர் எழுதி கொடுத்தார்.அப்பொழுது நான் ஒரு அழுக்கு லுங்கி மற்றும் பனியனில் திருடன் மாதிரி இருந்தேன். அப்படி ஒரு உடையில் இருந்த என்னிடம் அஜித் சாதாரணமாக நடந்து கொண்டார் என கூறினார்.

Leave a Comment