இதை மட்டும் செய்யுங்கள் கொரோனாவை தடுத்து விடலாம்..! நடிகர் சத்யராஜ் அறிவுரை.

தமிழ் நாட்டில் தற்பொழுது கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது இந்த தொற்று பாதிக்கப்பட்டதால் பல சினிமா பிரபலங்கள் நம்மளை விட்டு பிரிந்து விட்டார்கள்.அதிலும் குறிப்பாக மக்கள்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என பல சினிமா பிரபலங்கள் மக்களுக்கு சமூக வலைதள பக்கங்களில் மூலம் எச்சரித்து வருகிறார்கள்.

அதைப்போல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என பல சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாமல் தமிழக அரசும் கூறி வருகிறது ஆனால் அதனை மக்கள்கள் கொஞ்சம் கூட கேட்காமல் இயல்பாகவே இருந்து வருகிறார்கள்.

இதனால் தான் இவர்களுக்கு இந்த தொற்று உடனே வந்துவிடுகிறது.இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என பல சினிமா பிரபலங்களும் கூறிவரும் நிலையில் மக்களை எச்சரிக்கும் வகையில் நடிகர் சத்யராஜ் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாராம்.அதில் அனைவருக்கும் வணக்கம் நம்மளுக்கு இந்த வருடம் மிகவும் சோதனையான வருடமாக அமைகிறது யாரும் தேவை இல்லாமல் வெளியே வராதீர்கள் முக்கியமாக மூன்று விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

தனது சொந்தக் காரர்கள் வீட்டில் எந்த இன்பச் செய்தி நடந்தாலும் துயரச் செய்தி நடந்தாலும் நாம் அங்கு செல்வதால்தான் நம்மிடம் இருக்கும் பிரச்சனை எந்த விழாவிற்கும் செல்லாமல் இருந்தால் நம்மளுக்கு கொரோனா தொற்று பரவாது என்ன நினைத்தாலும் பரவாயில்லை நம்மளை நாம் தான் பாதுகாக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் எதற்காக என்னுடைய விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று கேட்டாலும் நான் வராதது தான் உங்களுக்கும் நல்லது எங்களுக்கும் நல்லது என சொல்லிக் கொண்டே போக வேண்டும் மேலும் இந்த தொற்று ஒரு வருடத்திலோ அல்லது ஒரு சில மாதங்களிலோ இல்லாமல் போகும்.

sathyaraj2
sathyaraj2

நீங்கள் தமிழக அரசு மற்றும் மருத்துவர் ஆலோசனைப்படி தயவுசெய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் இதை மட்டும் செய்தால் தான் நாம் கொரோனா தொற்றில் இருந்து விடுபட முடியும் என அவர் கூறியதாக தற்பொழுது இந்த தகவல் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Comment