“ஒழுங்கா பாத்தியாடா”, ஒருமையில் பேசிய சூர்யா ரசிகரை வெளுத்து வாங்கிய நடிகர் சரத்குமார்.!!

actor sarathkumar scold surya fan for his misbehaviour: நடிகர் சூர்யா தயாரிப்பில், இயக்குனர் ஜே ஜே பிரெடரிக் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பொன்மகள் வந்தாள். மேலும் இந்த திரைப்படத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பாண்டிராஜ், பார்த்திபன், தியாகராஜன், பிரதாப் போத்தான் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் தான் இந்திய சினிமாவிலேயே ஓடிடி  தளத்தில் வெளியான முதல் திரைப்படமாகும்.

இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு திரைப் பிரபலங்கள் பலரும் நடிகை ஜோதிகாவிற்கு தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அந்தவகையில் நடிகர் சரத்குமாரும் படக்குழுவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நடிகர் சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில் இது மிகச்சிறந்த படம், இயக்குனர் பிரடரிக் நன்றாக வடிவமைத்துள்ளார்படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் பெருமைகள் அனைத்தும் உங்களையே சேரும் என்று பதிவிட்டு ஹாஸ் டேகில் பொன்மகள் வந்தாள், ஜோதிகா மற்றும் சூர்யா சிவகுமார் போன்றரோரை டேக் செய்து இருந்தார். ஆனால் இதை ஆங்கிலத்தில் எழுதி இருந்தார்.

இதனைப் பார்த்த ரசிகர் ஒருவர் “யாருக்கு வாழ்த்து சொல்றீங்க யார் இதை பார்த்து உங்களுக்கு ஓட்டு போட போற தயவுசெய்து தமிழில் பதிவு போடுங்க.. அப்போ  ஏன் ஆங்கிலேயரை விரட்டி அடித்தீர்கள்  தமிழை நீங்களே பேசலனா அப்ப யாரு பேசுவா” என்று கேட்டிருந்தார்.

மேலும் அதற்கு பதிலளித்த நடிகர் சரத்குமார் “கண்டிப்பா சகோதரா” என்று இனி நான் தமிழில் பதிவு செய்கிறேன் என கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து மற்றொரு சூர்யா ரசிகர் ஒருவர் “சூர்யா ட்விட்டரில் இருக்கிறார் அவரை டேக் செய்து விட்டு ட்விட் போடு டா” என்று ஒருமையில் பேசியுள்ளார்.

மேலும் இதனை பார்த்து கடுப்பான சரத்குமார் “ட்விட்டை ஒழுங்கா பாத்தியாடா” என்று அவரது பாணியிலேயே பதிலடி கொடுத்தார் பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை அந்த பதிலை நீக்கிவிட்டார். தற்போது இந்த செய்தி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

sarathkumar-jothika-tamil360newz
sarathkumar-jothika-tamil360newz

 

Leave a Comment