ஒன்றல்ல இரண்டல்ல நான்கு நடிகைகள் மீது காதல் வலையை வீசிய சரத்குமார்..! அட அதுல நம்ம தல ஆளும் இருக்காங்களே..!

actor sarathkumar love news: தமிழ் சினிமாவில் கேப்டன் விஜயகாந்த் மூலமாக புலன் விசாரணை என்ற திரைப்படத்தின் மூலம்  திரையுலகில் அறிமுகமானவர் தான் சரத்குமார்.  இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் சூரியன் நாட்டாமை கட்டபொம்மன் அரண்மனை காவலன் அரசு சென்னையில் ஒரு நாள் என பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு பொன்னியன் செல்வன் மற்றும் அடங்காதே ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார் இவ்வாறு தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தன்னுடைய மவுசை பெற்ற சரத்குமார் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகராக இருந்து வருகிறார்.

நடிகர் சரத்குமார் முதன்முதலாக எதிர்மறையான கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார் அந்த வகையில் வில்லனாக பல திரைப்படங்களில் நடித்த மிரட்டியுள்ளார் அதற்குப் பிறகு விஜயகாந்தின் அறிவுரையை கேட்டு அதன் பின்னர் நடிகராகவும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ் சினிமாவில் 4 நடிகைகள் மீது காதல் வலையை வீசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  அதில் முதல் இடத்தைப் பெற்றவர் தான் நக்மா இரண்டாம் இடத்தில் ஹீரா அதன்பிறகு தேவயானி ராதிகா என கூறப்படுகிறது.

தல அஜித் காதலித்த ஹீராவை தான் சரத்குமாரும் காதலித்தார் ஆம். என்னதான் தல அஜித் அவர் மீது காதல் கொண்டாலும் அதை எதையும் யோசிக்காமல் தானும் ஹீரா மீது அளவு கடந்த காதலை வைத்தார் சரத்குமார்.

இவ்வாறு பிரபலமான நமது சரத்குமார் எம்ஜிஆரின் ரசிகன் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்தவகையில் எம்ஜிஆரை போல அரசியல் செய்யவேண்டும் என்ற காரணத்தினால் தனக்கென ஒரு கட்சியை உருவாக்கி தனித்து நின்று போராடினார்.

அந்தக் கட்சிக்கு ஆல் இந்திய சமத்துவ மக்கள் கட்சி என பெயரிடப்பட்டது.  இந்நிலையில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து தற்போது அரசியலில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்.

heera
heera

Leave a Comment