ரோபோ ஷங்கருக்கு என்னதான் ஆச்சு.? புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் பிரபலமாகி தற்பொழுது வெள்ளித் திரையில் தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் அடுத்தடுத்து காமெடி நடிகராக நடித்து மிகவும் பிசியாக இருந்து வருபவர் தான் நடிகர் ரோபோ சங்கர். இவருடைய புகைப்படம் சமீபத்தில் சோசியல் மீடியாவில் வைரலாக இதனை பார்த்த ரசிகர்கள் ரோபோ சங்கருக்கு என்னதான் ஆச்சு என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நடிகர் ரோபோ சங்கர் தனுஷ் உடன் இணைந்து மாறி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் இதனைத் தொடர்ந்து தீபாவளி, வாயை மூடி பேசவும், புலி, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், வேலைக்காரன், ஹீரோ உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து கலக்கி வருகிறார்.

இவ்வாறு தமிழ் திரைவுலகில் மிகவும் பிசியாக இருந்து வரும் இவர் சென்னையில் சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் அனுமதி இன்றி வளர்த்த இரண்டு அலெக்ஸாண்டரின் பச்சைக் கிளிகளை வனத்துறையினர் பிடித்து சென்றதோடு மட்டுமல்லாமல் உரிய அனுமதி இன்றி வெளிநாட்டு ரக கிளைகளை வளர்த்ததால் ரோபோ சங்கருக்கு வனத்துறையினர் ரூபாய் 2.5 லட்சம் அபதாரம் விதித்தனர்.

இந்த கிளிகளை சில ஆண்டுகளாக வளர்த்து வரும் ரோபோ சங்கர் குடும்பத்தினர்கள் சமீபத்தில் ஹோம் டூர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர் அதன் மூலம் தான் வனத்துறையினர் கிளிகள் இருப்பதை தெரிந்து கொண்டுள்ளனர். எனவே அந்த கிளிகளைப் பிடித்து செல்ல பிறகு இது குறித்து தனது தோழி பரிசாக கொடுத்ததாகவும், எங்களுடைய குழந்தைகள் போல இந்த கிளைகளை வளர்த்து வருவதாகவும் ரோபோ சங்கர் மற்றும் அவருடைய மனைவி கூறி இருந்தனர்.

robo shangar
robo shangar

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் ரோபோ சங்கரின் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக அதில் மெலிந்த உருவத்தில் ரோபோ சங்கர் இருப்பதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சடைந்துள்ளனர். எனவே இவருக்கு உடல்நிலை சரியில்லையா? இல்லை என்றால் படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை குறைத்து உள்ளாரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Comment