விட்ட குறை தொட்ட குறை விடாது கருப்பு போல் ராஷ்மிகாவின் முன்னாள் காதலர்..! அடங்கொப்புரானா என்ன இப்படி சொல்லிட்ட…

Rashmika Mandanna: நடிகை ராஸ்மிகா மந்தனா குறித்து அவருடைய முன்னாள் காதலர் மனம் திறந்து சமீப பேட்டியில் கூறி இருப்பது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பெங்களூரை பூர்வீகமாகக் கொண்ட ராஷ்மிகா மந்தனா கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான க்ரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவருடைய அழகு, நடிப்பு ரசிகர்களை பெரிதளவிலும் கவர தெலுங்கு சினிமாவில் ஒரு கலக்கு கலக்கினார்.

இந்த படத்தினை தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா  கீதா கோவிந்தம் படத்தில் நடித்திருந்தார் இந்த படம் மகா ஹெட் அடிக்க தமிழ் ரசிகர்கள் மனதிலும் குடியேறினார். மேலும் டியர் காம்ரேட் படத்திலும் நடித்திருந்த இவர் தெலுங்கில் கொடிகட்டி பிறந்தார். அதன் பிறகு தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தினை தொடர்ந்து விஜய்யுடன் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் விஜய் உடன் இணைந்து நடித்ததால் ராஷ்மிகா மந்தனாவிற்கு சொல்லும் அளவிற்கு கேரக்டர் அமையவில்லை. தற்பொழுது தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் ஹிந்தியில் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் குட் பை, மஜ்னு, அனிமல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இவ்வாறு ஹிந்தியில் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் காதலில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் இருவரும் பலமுறை மாலத்தீவுக்கு ஒன்றாக செல்வத்தையும் வழக்கமாக வைத்திருக்கிறார்களாம். ஆனால் இது குறித்த வதந்திகளுக்கு ராஷ்மிகா மந்தனா மறுப்பு தெரிவித்த நிலையில் அவர் நடிகர் ரக்ஷித் ஷெட்டியை காதலித்தார்.

இருவரும் திருமணம் வரையும் சென்று நடக்காமல் போனது இந்நிலையில் சமீபத்தில் ரக்ஷித் ஷெட்டி பேட்டி ஒன்றில் ராஷ்மிகா குறித்து பேசி உள்ளார். அதாவது, ‘நானும் ராஷ்மிகா மந்தனாவும் தற்பொழுது கூட மெசேஜ் செய்து பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். படங்கள் வெளியாகும் பொழுது ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்ள தான் செய்வோம். அவருக்குத் திரை உலகில் பல கனவுகள் இருக்கின்றனர் அதை சரியாக புரிந்துக்கொண்டு இப்பொழுது நேஷனல் கிரஷ் ஆகிவிட்டார்’ என்று கூறியுள்ளார்.

Exit mobile version