அடுத்த ஜென்மத்திலாவது இந்த கிழவனாக நான் பிறக்க வேண்டும்..! மனைவி மகன் ஏக்கத்தை பேட்டியில் வெளிக்காட்டிய ரகுவரன்..!

actor raguvaran latest speeh: தமிழ் திரை உலகில் பல்வேறு நடிகர்கள் மற்றும் நடிகைகள் பிரபலமானது உண்டு அந்த வகையில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் தான் ரகுவரன் இவ்வாறு ரகுவரன் ரோகிணி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவ்வாறு இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் உள்ளார் அவர் யார் என்பதும் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதும் பலருக்கும் தெரியாத விஷயமாகவே இருந்து வருகிறது. நடிகர் ரகுவரன் பொதுவாக திரைப்படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

இவருடைய மகன் பெயர் ரிஷி வரன் இவர் பிறந்த ஆறு வருடத்திலேயே ரகுவரனுக்கும் அவருடைய மனைவிக்கும் கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து நடைபெற்று விட்டது ரகுவரனுக்கு உடல்நிலை குறைபாடு இருந்ததன் காரணமாக 4வருடத்திற்க்கு பிறகாக அவரை கவனிக்க ஆள் இல்லாத காரணத்தினால் இயற்கை எய்திவிட்டார்.

இவ்வாறு இவர் மறைந்த நாளன்று ரகுவரனின் மனைவி ரோகினி கூட அவரைப் பார்க்க வந்திருந்தார் . நடிகர் ரகுவரன் கடந்த 2007ஆம் ஆண்டு பிரபல பத்திரிக்கை ஒன்றில் மனம்விட்டுப் பேசி உள்ளார். அது உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேள்வி எழுப்பி உள்ளார்கள்.

அதற்கு பதிலளித்த நடிகர் ரகுவரன் ஒருநாள் இரவில் காரை எடுத்துக்கொண்டு மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்றிருந்தேன் அப்போது வாசலில் ஒரு வயதான கிழவர் அழகாக படுத்து கிடந்தார் திடீரென அவர் எழுந்து என்னுடைய பொண்டாட்டியே காரணம் என பதறினார்.

ஆனால் அவருடைய பொண்டாட்டி கொஞ்சம் தூரத்தில் தான் அமர்ந்திருந்தார் ஆனால் அதனை கவனிக்காமல் தெரியாமல் திட்டிட்டேன் என பின்னர் புலம்பியுள்ளார். ஆனால் அந்த பாட்டி அவர் சாப்பிடாமல் படுத்து விட்டார் என்றுதான் கோபித்துக் கொண்டு அமர்ந்து இருந்தாராம். அதன்பிறகு இருவரும் சாப்பிட்டு படுத்து விட்டார்கள். இதை பார்த்தவுடன் எனது மனது மழைத்துளி விழுந்தது போல் பூத்து விட்டன என கூரியிருந்தார் அதுமட்டுமில்லாமல் அடுத்த ஜென்மத்திலாவது நான் இந்த கிழவனாக பிறக்க வேண்டுமென என் மனது ஏங்கியது எனவும் அவர் கூரியிருந்தார்.

raguvaran-2
raguvaran-2

அதன்பிறகு சிக்னலில் ஒரு நாள் காத்துக் கொண்டிருக்கும் பொழுது ஏழு வயது குழந்தை ஒன்று இந்தியில் பேசி என் சட்டையை பிடித்தது ஆனால் ஏதோ ஒரு ஞாபகத்தில் அந்த குழந்தையின் கையை தட்டி விட்டேன் ஆனால் அந்த குழந்தையின் முகம் மட்டும் என்னால் மறக்க முடியவில்லை மறுபடியும் மறுபடியும் அந்த குழந்தையின் ஞாபகம் வந்து கொண்டே இருந்தது இதனால் என் மகனுக்கு போன் செய்து உடனே வர சொல்லி அவனிடம் என்னுடைய கஷ்டங்களை கூறினேன்.

அதுமட்டுமில்லாமல்  என்னுடைய ஞாபகம் அனைத்துமே என்னுடைய மகன் ரிஷி மேல்தான் ஏனெனில் என் உலகத்தை அற்புதமாக்கியது ரிஷி தான் அவனையும் என்னை ஆசீர்வதித்து கொண்டே இருக்கும் சாய்பாபா ஆகிய இருவரையும் என்னால் மறக்கவே முடியாது என மனமுருகி பேசி உள்ளார்.

raguvaran-1
raguvaran-1
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment