மருத்துவமனையில் தல அஜித் செய்த செயல்..! அசந்து போன நடிகர் ராதாரவி..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் ரசிகர்களின் கனவு கண்ணனாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித் இவ்வாறு பிரபலமான நமது நடிகரை சினிமாவில் கெத்தாக காட்டினாலும் உண்மையில் இவர் ஒரு அப்பாவி என்று சொல்லலாம். ஏனெனில் இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரியாமல் பார்த்துக் கொள்வதில் வல்லவர்.

அந்த வகையில் தான் செய்யும் உதவி யாருக்கும் தெரியக்கூடாது என்பதில் மிகவும் கட்டுப்பாடுடன் இருந்து வருகிறார் அந்த வகையில் தல அஜித்தும் பல்வேறு விஷயங்களில் கஷ்டப்பட்டிருக்கிறார் அந்த வகையில் இவர் கூட இருக்கும் நபர்களுக்கு கூட இவருடைய கஷ்டங்கள் தெரியாமல் பார்த்துக்கொள்வார்.

அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய தல அஜித் நான் ஒரு நல்ல நிலைமைக்கு வந்தால் என்னால் முடிந்தவரை இல்லாத பல மக்களுக்கு உதவி செய்வேன் என்று கோரியிருந்தார் ஆனால் இவர் நடிக்க வந்த பொழுது அறிவித்த அறிக்கைதான் ஆனால் அவை இன்றுவரை கடைபிடித்துக் கொண்டு வருகிறார்

அந்த வகையில் ஒரு சமயம் நடிகர் ராதாரவி அவர்கள் ஜெய்சங்கரின் மகன் விஜய் சங்கரின் கண் மருத்துவமனைக்கு சென்று இருந்தாராம் அப்போது கண் பரிசோதனை செய்யப்பட்டது பின்னர் அவருக்கு கண் லென்ஸ் வைக்க வேண்டும் என்று 60 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்றும் கூறியுள்ளார்கள். ஆனால் கொஞ்சம் நேரம் காத்திருங்கள் என்று மருத்துவ ஊழியர்கள் கூறியிருந்தார்கள்.

ajith-01
ajith-01

அவரும் காத்திருந்த நிலையில் திடீரென தல அஜித் அங்கு வந்தாராம். அப்பொழுது விசாரித்த நிலையில் 5000 பேருக்கு கண் லென்ஸ் வைப்பதற்கான செலவை நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என தல அஜித் கூறியிருந்தாராம். இவ்வாறு தல அஜித்தின்  இந்த செயலை பார்த்து பூரித்துப் போனது மட்டுமில்லாமல் அதன் பிறகு அஜித் மீது தனி மரியாதை உருவாகி விட்டது என ராதாரவி கூறியுள்ளார்.

Leave a Comment