ஆடுஜீவிதம் படப்பிடிப்பு முடிந்து விரைவில் தாயகம் திரும்பும் பிரித்திவிராஜ் மற்றும் படக்குழுவினர்.

actor prithivaraj and their troup members return to native: நடிகர் பிரித்திவிராஜ் நடிகர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் 2005 ஆம் ஆண்டு கனா கண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்னர் அதனை தொடர்ந்து பாரிஜாதம், மொழி, கண்ணாமூச்சி ஏனடா, நினைத்தாலே இனிக்கும், ராவணன், காவியத்தலைவன், உருமி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார் என்பதை அனைவரும் அறிந்ததே.உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து வசதி முற்றிலும் தடைபட்டுள்ளது. நடிகர் பிரித்திவிராஜ் தற்போது மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் தற்போது ஆடுஜீவிதம் திரைப்பட ஷூட்டிங்கிற்காக சென்றிருந்தார். அங்கு இவர் மற்றும் படக்குழுவினர்  ஜார்டனில் 58 நபருடன் ஒரு பாலைவனத்தில் சிக்கிக்கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர் இந்திய அரசாங்கத்திடம் தங்களை ஜார்டனில் இருந்து வீட்டிற்கு கொண்டுவர உதவுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும் பிரிதிவிராஜ் தனது ட்விட்டர் பதிவில் ஆடுஜீவிதம் படத்தின் சூட்டிங் முடிவடைந்து விட்டதாகவும். விரைவில் அவரும் படக்குழுவினரும் தாயகம் திரும்ப உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

Leave a Comment