சின்ன வயதிலேயே அப்பாவை இழந்த நடிகர் பிரதாப் போத்தன் – சினிமாவில் தடம் பதித்தது எப்படி.?

அண்மை காலமாக சினிமா உலகில் இருக்கும் பிரபலங்கள் ஏதோ ஒரு வகையில் இறந்து கொண்டே இருக்கின்றனர். இது தமிழ் சினிமாவுக்கு பெரிய பாதகமாகவே இருந்து வருகிறது. நேற்று பிரபல தென்னிந்திய நடிகரான பிரதாப் போத்தன் உடல்நல குறைபாடு காரணமாக உயிரிழந்தார். இவரது இறப்புச் செய்தியை கேட்ட தமிழ் திரை உலகம் ஆடி போனது குறிப்பாக முக்கிய பிரபலங்களான மணிரத்தினம் தொடங்கி இளம் நடிகர் நடிகை பலரும் நேரில் போய் அஞ்சலி செலுத்தினர்.

பிரதாப் போத்தன் தமிழ் சினிமாவில் மட்டும் நடிக்காமல் மலையாளம் ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி உள்ளார் 70களில் இருந்து சினிமா உலகில் நடித்து வந்தார் சினிமா உலகில் நடிகராக மட்டும் தன்னுடைய பயணத்தை நிறுத்திக் கொள்ளாமல் இயக்குனராகவும் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இப்படி சினிமாவில் வெற்றியை கண்டிருந்தாலும் தற்பொழுது உடல்நல குறைவு காரணமாக அவர் இயற்கையை எழுதியது.

பலருக்கும் வருத்தத்தை கொடுத்துள்ளது இவர் எப்படி சினிமா உலகில் என்ட்ரி ஆனார் என்பது குறித்து தற்பொழுது தகவல் கிடைத்துள்ளது பள்ளி படிப்பை முடித்த இவர் சென்னையில் வந்து கல்லூரி படிப்பை தொடங்கினார் பின் தனது கல்லூரி நண்பர்கள் உதவியோடு நாடகத்தில் நடிக்க தொடங்கினார் படிப்படியாக நடிப்பில் தனது முழு ஆர்வத்தையும் காட்டினார் பின்னர் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் பட்டம் பெற்ற பிரதாப் மும்பை விளம்பர நிறுவனத்தில் எழுத்தாளராக பணியாற்றினார்.

இப்படி கிடைக்கின்ற கொஞ்ச கொஞ்ச வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி ஒரு கட்டத்தில் வெள்ளி திரையில் வாய்ப்பை பெற்றார். ஆவாரம் என்ற திரைப்படத்தில் அறிமுகமான பிரதாப் தன்னுடைய இரண்டாவது படத்தையே தமிழ் மற்றும் மலையாளமாகிய இரு மொழிகளிலும் நடித்தார். அழியாத கோலங்கள் இவருக்கு மாபெரும் நடிகர் என்ற பட்டத்தை பெற்றுக் கொடுத்தது அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்து சினிமாவில் ஓடினார். பிரதாப் போத்தன் காதல் கதை என்ற திரைப்படத்தில் ராதிகாவுடன் இணைந்து நடித்தார் அப்போது இருவருக்கும் இடையே காதல் வளர்ந்த பின் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் இவர்களது வாழ்க்கை ரொம்ப வருடம் தாக்கு பிடிக்க முடியாமல் ஒரே வருடத்திலேயே பிரிந்து விட்டனர். அதன் பிறகு அமலா சத்தியநாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் சில வருடம் இவருடன் வாழ்க்கையை வாழ்ந்த இவர் 2012 ஆம் ஆண்டு மனைவி அமலாவிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து கடைசியாக சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் வசித்தார். நேற்று காலை 8 மணிக்கு இயற்கை எழுதினர்.

Leave a Comment