அஜித்தின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் இருந்து விலகிய பிரசாந்த்.! எல்லாம் வயசு பன்ற கோளறு எதற்காக தெரியுமா.? உண்மையை பல வருடம் கழித்து போட்டு உடைத்த பிரபலம்.

தென்னிந்திய சினிமாவில் 90 காலகட்டத்தில் அஜித் விஜய்க்கு போட்டியாக இருந்தவர் பிரசாந்த், இவர் அப்போதைய சாக்லேட் பாய் என்றும் கூறலாம். இவர் தமிழ்,  தெலுங்கு, மலையாளம்,  ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

தமிழில் முதன்முதலாக பிரசாந்த் வைகாசி பொறந்தாச்சி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.  முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வெற்றியைப் பெற்று தந்தால் பேரும் புகழும் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து செம்பரத்தி,  ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள்,  ஜோடி என தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை கொடுத்து வந்தார். இப்படி தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்ததால் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

ஆனால் ஒரு காலகட்டத்தில் சில தோல்வி திரைப்படங்களை கொடுத்ததால் தன்னுடைய மார்க்கெட்டை இழந்து குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் அளவிற்கு இறங்கிவிட்டார். அதற்கு காரணம் புகழ் போதை தான் என கூறுகிறார் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன்.

மேலும் அந்தப் பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் பல சுவாரஸ்யமான தகவலை கூறியுள்ளார் அவர் கூறியதாவது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் அஜித் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது பிரசாந்த் தான்.

ஆனால் பிரசாந்த் அந்த திரைப்படத்தில் ஏன் நடிக்கவில்லை என்ற காரணம் தற்பொழுது தெரிய வந்துள்ளது, அதாவது நடிகர் பிரசாந்த் நடித்தால் ஹீரோவாகத்தான் ஒரு நடிப்பேன் என கூறிவிட்டாராம். அதுமட்டுமில்லாமல் மம்முட்டி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்கிறேன் எனக் கூறிவிட்டாராம்.

அதனால்தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்திலிருந்து பிரசாந்த் விலகினார் , இதனை பயில்வான் ரங்கநாதன் பேட்டியில் கூறியுள்ளார், மேலும் புகழ் போதையில் அஜித்,  விஜய்க்கு இணையாக இருந்த பிரசாந்த் தற்பொழுது சிறிய கதாபாத்திரத்திலும் குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருகிறார்.

இந்த தகவல் ரசிகர்களுடைய காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

ajith
ajith

Leave a Comment