ஜோதிகாவின் நடிப்பிற்கு புகழாரம் சூட்டிய பார்த்திபன்!! இப்படியும் பாரட்ட முடியுமா.!! பார்த்திபனையே புகழ வைத்த ஜோதிகா!!

actor parthiban praised actress jothika acting in ponmagal vanthal: 2டி நிறுவனம் தயாரிப்பில், ஜேஜே பிரெடரிக் இயக்கத்தில், ஜோதிகா, பாக்யராஜ்,  பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து வெளியான திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்திய திரையுலகில் ஓடிடி தளத்தில் வெளியான முதல் திரைப்படம் பொன்மகள் வந்தாள் ஆகும்.

பொன்மகள் வந்தாள் திரைப்படம் பற்றி விமர்சனங்கள், ஜோதிகாவின் நடிப்பு போன்றவற்றைக் குறித்து பலரும் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் பார்த்திபன் ஜோதிகாவின் நடிப்பு பற்றிய கடிதமொன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பது. “நீர்‌… பாத்திரத்துடன்‌ ஒன்றி அப்பாத்திரத்தின்‌ வடிவத்தை அடைவதைப்‌ போல்‌…

நீர்‌ இப்படத்தில்‌ பாத்திரமாகவே அதுவும்‌ பத்திரமாகவே (கொஞ்சம்‌ நழுவினாலும்‌ உடையக்‌கூடிய கண்ணாடிப்‌ பாத்திரம்‌). Reality show-வில் பாதிக்கப்பட்ட பெண்ணையே அழைத்து வந்து அவர்‌ வலியிலிருந்து வலிமைக்குள்‌ நுழைந்த பகீரத தருணங்களை விளக்கும்‌ போது, இனம்‌ புரியாத விசும்பல்‌ நமக்குள்‌ வெடிக்கும்‌. அப்படி படம்‌ நெடுக! தன்‌ அகன்ற விழிகளால்‌ ஆடியன்ஸை ஆக்கிரமிக்கும்‌ அக்கிரமம்‌.

அதுவும்‌ Maximum சின்ன முள்‌, பெரிய முள்‌ மற்றும்‌ நடு முள்‌ இத்தனை முட்களுக்கு நடுவே தான்‌ நேரம்‌ பூப்‌ பூவாய்‌ வாசம்‌ வீசுவதை போல… மிக சாதூர்யமாக, சாத்வீகமாக, சவாலான ஒரு கேஸை Lawவகமாகக்‌ கையாண்டு… கண்ணீர்‌ ஆறுகளுக்கு நடுவே பன்னீர்‌ புஷ்பம்‌ பூப்பதைப்‌ போல உங்கள்‌ கன்னக்குழியினில்‌ ஒரு மெளனப்‌ புன்னகை.

அசோக PILLAR மீது 4,5 சிங்கங்கள்‌ போல படத்தில்‌ சிலர்‌ நடித்‌-இருந்தாலும்‌ நீங்கள்‌ மட்டுமே அந்த PILLAR.. தில்’லர்‌!’ அந்த சட்டப்‌ புத்தகத்தில்‌ 1000 பக்கங்கள்‌ இருந்தாலும்‌, அந்த சட்டமாகவே நீங்கள்தான்‌ இருக்கிறீர்கள்‌. அந்த சுத்தியல்‌ கூட, உங்கள்‌ உணர்ச்சிக்கு முன்னால்‌ யார்‌ நடித்தாலும்‌ ‘SILENCE’ என அதட்டுகிறது.

நீதி தேவதைக்‌ கூட ஓரக்கண்ணால்‌ உங்கள்‌ நடிப்பை மட்டுமே ரசிக்கிறாள்‌. அவளைப்‌ போலவே நானும்‌ உங்களின்‌ துல்லியமான உணர்ச்சி வெளியீட்டை உணர்ச்சிவசப்பட்டே பார்த்துக்‌ கொண்டடிருந்ததில்‌ நானே என்‌ வசப்படாமல்‌ போனேன்‌-போலானேன்‌. ஏன்‌?

நடிகர்‌ திலகம்‌, நடிகையர்‌ திலகம்‌, நடிப்பின்‌ இலக்கணம்‌ இப்படி இன்னும்‌ சில பல இருப்பினும்‌. அவை அனைத்தையும்‌ உருக்கி ஒரு பொன்‌ கேடயமாக்கி ..கதா பாத்திரமாகவே சதா க்ஷனமும்‌ வாழ்ந்திருக்கும்‌ எங்கள்‌ ஜோ.வுக்கு ‘ஜே ஜே’ சொல்லி வழங்கலாம்‌.வாழ்த்தலாம்‌ படத்தை வெளியிட்ட OTT – Amazon ஆக இருக்கலாம்‌, நடிப்பை வெளியிட்ட Jyotika – Amazing in Oppatra (ஒப்பற்ற) Thaniththuvamaana (தனித்துவமான) Thiramai (திறமை)” இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

 

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment