நீ அடிச்சா நானும் அடிப்பேன்..! ப்ளூ சட்டை மாறனுக்கு சரியான பதிலடி கொடுத்த நடிகர் பார்த்திபன்..!

சினிமாவைப் பற்றி விமர்சனம் செய்து வரும் ப்ளூ சட்டை மாறனுக்கும் பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான பார்த்திபன் ஆகிய இருவருக்கும் சண்டை தற்போது விடாமல் துரத்திக் கொண்டே இருக்கிறது அந்த வகையில் பார்த்திபன் அவர்கள் ஒரே சாட்டில் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்திருந்தார் அந்த வகையில் இந்த திரைப்படத்தின் மூலம் ஆரம்பித்த சண்டை இன்று வரை தொடர்கதையாகவே இருந்து வருகிறது.

மேலும் இந்திய சினிமாவில் ஒரே சாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்றால் அது இரவின் நிழல் திரைப்படம் தான் ஆனால் இதற்கு முன்பதாகவே ஒரு திரைப்படம் வெளியாகி உள்ளது என ப்ளூ சட்டை மாறன் கூறியது தொடர்ந்து பார்த்திபன் ரசிகர்கள் கடும் கோபத்துக்கு ஆளானது மட்டும் இல்லாமல் ப்ளூ சட்டை மாறன் பொம்மைக்கு செருப்பு மாலையை அணிவித்த கிண்டல் செய்துள்ளார்கள்.

அதேபோல இந்த இரவின் நிழல் திரைப்படத்திற்கு நூற்றுக்கு மேற்பட்ட விருதுகள் கிடைக்க இருப்பதாகவும் சர்வதேச விழா ஒன்றில் நடிகர் பார்த்திபன் அவர்கள் தெரிவித்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் இதற்கு பதில் கொடுக்கும் வகையில் இதில் ஏதேனும் அங்கீகாரம் உள்ள நிறுவனம் விருது வழங்கியுள்ளதா என்ற கேள்வி எழுப்பியது மட்டும் இல்லாமல் அதெல்லாம் உப்புமா கம்பெனி என விமர்சனம் செய்துள்ளார்.

இதற்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் பார்த்திபன் அவர்கள் சென்னையில் பிறந்து வளர்ந்து தமிழக அரசு கொடுக்கும் விருதுகளை மிகவும் கேவலமாக விமர்சிக்கும் விமர்சகர் அவர்களுக்கிடையே ரசிகர்களின் கைதட்டலையே மிகப்பெரிய பரிசாக நினைப்பவன் நான் அதேபோல பெற்ற தாய் பெற்ற பிள்ளையை பெருமையாக நினைப்பவன் மேலும் எதிர்மறையான கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதிர்மறையான குணம் உடையவர் என்று பார்த்திபன் கூறியுள்ளார்.

இவ்வாறு பார்த்திபன் வெளியிட்ட பதிவை பார்த்த ப்ளூ சட்டை மாறன் ஏதேனும் மற்றொரு பதிவினை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது அது மட்டும் இல்லாமல் இந்த சண்டை எப்பொழுதுதான் விடிவுக்கு வரும் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகவும் அவளுடன் இருக்கிறார்கள்.

Leave a Comment