கூடவே இருந்து பாதாளக் குழியில் தள்ளிய நண்பர்கள்.!! பாண்டியனின் கடைசி காலம்.

நடிகர் பாண்டியன் பாரதிராஜா இயக்கத்தில் மண்வாசனை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இசை ஞானி இளையராஜா அவர்களின் இசையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. அதனால் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து வலம் வந்தார். பின்னர் மார்க்கெட் குறைய ஆரம்பித்ததும் அரசியல் மீது கொண்ட ஆர்வத்தால் பிரபல கட்சி ஒன்றிற்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

மேலும் இந்த அரசியலில் கிடைத்த சில நண்பர்களின் மூலம் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்.நண்பர்களுக்கு உதவுவதற்காக தனது சொத்தை விற்று செய்வது செலவு செய்தார். பிறகு அவருக்கு கை செலவுக்கு கூட காசு இல்லாமல் போக அவரது நண்பர்கள் அவரை மதிக்காமல் கை விட்டனர்.

மேலும் போதைக்கு அடிமையான நடிகர் பாண்டியன் கல்லீரல் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவுக்கு கூட காசு இல்லாமல் காலமானார். மேலும் இவரின் இறப்பிற்கு கூடா நட்பு தான் காரணமாக அமைந்தது என கோலிவுட் வட்டாரம் கூறுகிறது.

Leave a Comment