நடுரோட்டில் நிவர் புயலில் பாட்டு பாடியபடி குதூகலமாக படகு ஒட்டிய மன்சூர் அலிகான்.! வைராலாகும் வீடியோ ..

actor mansooralikhan boat ride at road in chennai nivar storm video : இந்த ஆண்டில் கொரானாவுக்கு அடுத்ததாக தமிழகம் முழுதும் மிரட்டிக் கொண்டிருந்தது என்னவென்றால் அது நிவர் புயல் தான். கடந்த இரண்டு, மூன்று நாட்களாக மக்கள் இந்த நிவர்புயலின்  தாக்கம் எப்படி இருக்குமோ என்ற பயத்திலேயே வாழ்ந்து வந்தார்கள்.

இந்நிலையில் புயல் கரையை கடக்குவதற்கு  முன்பு சென்னையில் கடலோர பகுதிகளில் அதிகமாக மழைபெய்து வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

மேலும் புயல் கரையை கடந்தாலும் கடலோர குடியிருப்பு வீடுகளில் தண்ணீர்  இன்னும் போகவில்லை அந்த வகையில் தமிழ் நடிகரான மன்சூர் அலிகன் அவரது குடியிருப்பு பகுதிகளில் மழை பெய்து வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மன்சூர் அலிகான் அந்த தண்ணீரில் படகோட்டி கொண்டே அருமை அருமையான பாடலை பாடி எடுத்த வீடியோ . தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கஷ்டத்திலும் குதுகலமாக இருக்காரு பாருங்கள் என்று கூறி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..

 

Leave a Comment