இறுதி மூச்சு வரை பிள்ளைகளுக்காகவே உழைத்த நடிகர் மணிவண்ணனின் மகள் மற்றும் மகன் யார் என்று தெரியுமா..?

actor manivannan family photos: தன்னுடைய சிறந்த பேச்சு திறமை மூலமாக ரசிகர் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர் தான் நடிகர் மணிவண்ணன். இவர் திரை உலகில் முதல் முதலாக ஜோதி என்ற திரைப்படத்தின் மூலமாக தான் இயக்குனராக அறிமுகமானார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து நூறாவது நாள் என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார்.  இவ்வாறு இயக்குனராக வலம் வந்த நமது மணிவண்ணன் அதன்பிறகு நடிகராகவும், வில்லனாகவும் திரை உலகில் வலம் வர ஆரம்பித்தார்.

அந்த வகையில் இவர் நடித்த அமைதிப்படை என்ற திரைப்படம் ரசிகர்களால் இன்றும் மறக்கமுடியாத திரைப்படமாக அமைந்தது. மேலும் இந்த திரைப்படத்தின் மூலம் அரசியல் நோக்கங்களையும் செயல்களையும் மிக தெளிவாக சுட்டிக் காட்டியிருப்பார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளார்கள் அவருடைய மகன் பெயர் ரகுவண்ணன் மேலும் மகளுடைய பெயர் ஜோதி மேலும் அவருடைய மகளுக்கு ஜோதி என பெயர் வைத்தற்கு காரணமே அவருடைய இரண்டாவது திரைப்படத்தின் டைட்டில் ஜோதி என்பது தான்.

பொதுவாக மணிவண்ணன் சினிமாவில் அதிக ஆர்வம் உள்ளதன் காரணமாக அதைப் பற்றிய சிந்தனையில் இருப்பது மட்டுமல்லாமல் அதற்கான வேலையை செய்து வருவாராம் இதனால் அவருடைய பிள்ளைகள் இருவரும் எங்களுடன் நேரத்தை செலவழியுங்கள் என்று கேட்பார்களாம்.

ஆனால் மணிவண்ணன் நான் சம்பாதித்தால் தானே நீங்கள் கேட்பது என்னால் வாங்கி தர முடியும் என்று கூறுவாராம் மேலும் இரவில் நேரம் கெட்ட நேரத்தில் வீட்டிற்கு வருவாராம் அப்பொழுது கூட தனது அசதியை காட்டிக் கொள்ளாமல் தனது மகன் மற்றும் மகளை சாப்பிட்டீங்களா கண்ணுகளா என கேட்டுவிட்டு தான் உறங்க செல்வாராம்.

இந்நிலையில் ஜோதி தன்னுடைய அப்பா இயக்கத்தில் வெளிவந்த நூறாவது நாள் என்ற திரைப்படத்தினை மீண்டும் இயக்க வந்துள்ளாராம்.

manivannan
manivannan

Leave a Comment