கார்த்தியின் மகளா இது.. ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்து விட்டாரே.!

கடந்த 2004ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளிவந்த பருத்திவீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமானவர்தான் நடிகர் கார்த்தி. இவருடைய முதல் திரைப்படமே இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை தந்தது இந்த படத்தினை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியினை பெற்ற நிலையில் நான் மகான் அல்ல, பையா போன்ற வரிசையாக வெற்றி திரைப்படங்களை தந்தார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் என்ற பட்டியலில் இடம் பிடித்தார். தற்பொழுது வரையிலும் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்களில் நடித்தவரும் கார்த்தி கடைசியாக விருமன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இவ்வாறு நடிப்பையும் தொடர்ந்து பல தொழில்களை செய்து வரும் நிலையில். உழவர்களின் மேம்பாட்டுக்காக உழவன் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளை மூலம் நலிவுற்ற விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். மேலும் விருமன், பொன்னியின் செல்வன் ,சர்க்கார் ஆகியவற்றை திரைப்படங்களை தொடர்ந்து தற்பொழுது கார்த்தி ஜப்பான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

karthi

இந்த படத்தினை குக்கூ, ஜோக்கர் போன்ற படங்களை இயக்கிய ராஜூமுருகன் இயக்கி வருகிறார். இந்தப் படம் தமிழகத்தல் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து நகைச்சுவை கலந்த படமாக உருவாக்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக அனு இமானுவேல் நடித்திருக்கும் நிலையில் படப்பிடிப்புகள் முடிந்திருக்கும் நிலையில் மற்ற பணிகளை பட குழு மேற்கொண்டு வருகிறார்கள்.

karthi

இதனை அடுத்து வருகின்ற தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஜப்பான் படம் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. இந்நிலையில் கார்த்தி தனது சொந்த ஊரில் கோவிலுக்கு முளைப்பாரி எடுத்துச் செல்லும் பொழுது தனது மனைவி மற்றும் மகளுடன் கலந்து கொண்டுள்ளார் அது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இதனைப் பார்த்து ரசிகர்கள் கார்த்தியின் மகளா இது என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

Leave a Comment

Exit mobile version