தனது மனைவி மற்றும் மகன்களுடன் நவரச நாயகன்.!! பலரும் பார்த்திருக்க முடியாத புகைப்படம்.

actor karthik with his family photo:பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் தான் நவரசநாயகன் கார்த்தி இவர் 1981 ஆம் ஆண்டு அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக தமிழ் சினிமாவில் நடிக்க வந்தார், அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்திலிருந்து என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் நடித்த முதல் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்ததால் சிறந்த அறிமுக ஆண் நடிகர் என்ற தமிழக அரசு விருதை தட்டிச் சென்றார், இதனைத் தொடர்ந்து உடனே அந்த திரைப்படம் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்து ஹிட்டடித்தது. அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தை தொடர்ந்து நினைவெல்லாம் நித்தியா, வாலிபமே வா வா இளஞ்சோடிகள் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

கார்த்தி இதுவரை 4 முறை தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகளை தட்டிச்சன்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் தமிழக அரசு விருதுகளையும் வாங்கியுள்ளார், மேலும் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளையும் வாங்கியுள்ளார்.

இப்படி விருது மேல் விருது வாங்கிய நவரச நாயகன் கார்த்திக் சமீபத்தில்கூட தானாசேர்ந்தகூட்டம், மிஸ்டர் சந்திரமௌலி ஆகிய திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் நவரசநாயகன் கார்த்தி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் நவரச நாயகன் கார்த்திக் உடன் அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

karthik
karthik

Leave a Comment