ஒரே நேரத்தில் மூன்று திரைப்படத்தில் கமிட்டான நடிகர் கார்த்திக்..! ரிஸ்க் எடுக்கறது எல்லாம் எங்களுக்கு ரஸ்க் சாப்பிடுவது போல..!

திரைப்படத்தில் நடிக்கும் பொழுது  தன்னுடைய அழகான சிரிப்பின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகர் கார்த்திக் இவர் நடிகர் சிவகுமாரின் மகன் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அதுமட்டுமல்லாமல் இவருடைய அண்ணன் சூர்யா அவர்கள் கூட தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் அமீர் இயக்கத்தில் முதன்முதலாக பருத்திவீரன் என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார் இத்திரைபடத்தில் அவருக்கு ஜோடியாக பிரியாமணி நடித்திருப்பார் இவ்வாறு வெளிவந்த திரைப்படம் மாபெரும் ஹிட் கொடுத்து அவரை கௌரவித்தது.

இவ்வாறு  படு லோக்கலாக இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே நமது கார்த்திக் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவ்வாறு தன்னுடைய சிறந்த நடிப்பை வெளி காட்டியதன் மூலமாக தற்போது தமிழ் சினிமாவில் இவர் முன்னணி நடிகராகவும் வலம் வர ஆரம்பித்து விட்டார்.

நடிகர் கார்த்திக் நடிப்பது மட்டுமின்றி சமூக ரீதியாக பல்வேறு பணிகளை செய்து வருகிறார். அந்தவகையில் கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் பிறகாக உழவன் பவுண்டேஷன் என்ற ஒரு அமைப்பின் மூலமாக விவசாயிகளுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.

இவ்வாறு பிசியாக இருந்து வரும் நமது கார்த்திக் தற்போது பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு உருவாகும் இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தை மணிரத்தினம் தான் இயக்கி வருகிறார் மேலும் கார்த்திக் சர்தார் விருமன் போன்ற திரைப்படங்களில் அடுத்தடுத்த நடித்து வருகிறார்.

karthik-1
karthik-1

இந்நிலையில் தற்போது 10 நாட்கள் அவருக்கு  இடைவெளி இருப்பதன் காரணமாக இந்த நாளில் வேறு ஒரு திரைப்படத்தை ஒப்பந்தம் செய்துள்ளாராம் இவ்வாறு கார்த்திக் சினிமாவில் அதிரடியாக இறங்கியதன் காரணமாக அவருடைய எதிர்பார்ப்பும் அதிகமானதுமட்டுமல்லாமல் ஷங்கரின் மகள் வெறும் திரைப்படத்திலும் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave a Comment