சிம்புவை நம்பி பல கோடி செலவழிக்க இருக்கும் நடிகர் கமல்.! டபுள் ஆப்ஷனில் மிரட்ட தயாராகும் எஸ்டிஆர்..

நடிகர் சிம்பு தற்போது பத்து தல திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இதனை அடுத்து கமலஹாசன் அவர்களின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சிம்பு தற்போது பத்து தல திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தை என் கிருஷ்ணா இயக்கியுள்ள நிலையில் ஏஜிஆர் என்கின்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிம்பு. இந்த படம் மணல் மாஃபியாவை மையமாக வைத்து உருவாகி இருக்கும் நிலையில் கவுதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வருகின்ற மார்ச் மாதம் 3ம் தேதியன்று ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் தற்போது பட குழுவினர்கள் போஸ்ட் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் பத்து தல திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் சிம்பு நடிக்க உள்ள அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக இருப்பதாகவும் பிறகு மிஷ்கின் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் இதனை அடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகவும் தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை.

ஆனால் இயக்குவது யார் என்று தெரியவில்லை என்றாலும் சிம்புவின் அடுத்த படத்தினை கண்டிப்பாக கமலஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறதாம். எனவே கமல் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படமும், அடுத்ததாக உதயநிதியை வைத்து ஒரு படமும் தயாரிக்க உள்ளதாக அறிவித்திருந்தார். ஆனால் தற்பொழுது சிவகார்த்திகேயன் படம் தாமதமாகி வரும் நிலையில் இதனையடுத்து உதயநிதி அவர்களும் அரசியலில் பிஸியாக இருந்து வருகிறார்.

எனவே தற்பொழுது சிம்புவின் படத்தினை தயாரிக்கலாம் என கமல் முடிவு எடுத்திருக்கும் நிலையில் இந்த படத்தை ரூபாய் 100 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கலாம் என ராஜ்கமால் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் கமல் திட்டமிட்டு உள்ளாராம் இந்த படத்தில் சிம்பு அவர்கள் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

Leave a Comment