மற்றொரு நடிகையின் குழந்தைக்கு அப்பாவான நடிகர் கமல்.! அட அதுவும் திருமணம் ஆன பின்பா அதிர்ச்சியாகவும் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் கமலஹாசன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், அரசியல்வாதி, என பன்முகத் தன்மை கொண்டு விலகி வருகிறார். இதனைத் தொடர்ந்து இவர் சில ஆண்டுகளாகவே எந்த ஒரு திரைப்படத்திலும் சரியாக நடிக்கவில்லை அப்படி நடித்தாலும் அந்த படங்கள் எதுவும் சரியாக இவருக்கு கை கொடுக்கவில்லை.

இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் கமலின் சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்டது என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு விக்ரம் திரைப்படம் ஒரு பிரம்மாண்ட வெற்றியை கொடுத்தது அதுமட்டுமல்லாமல் கமல் சினிமா வாழ்க்கையில் எந்த ஒரு திரைப்படம் இந்த அளவிற்கு ஒரு வெற்றியை கொடுத்ததில்லை என்று அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கும் நிலையில் நடிகர் கமல் அவர்கள் தன்னுடைய சினிமா வாழ்க்கை ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரையிலும் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு இருக்கிறார் அது மட்டுமல்லாமல் சில நடிகைகள் இவரால் சினிமாவே வேண்டாம் என்று ஓடி இருக்கிறார்கள் என்று பல தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் நடிகர் கமல் அவர்கள் ஏற்கனவே ஒரு நடன கலைஞரை திருமணம் செய்து கொண்ட நிலையில் வேறொரு நடிகையின் குழந்தைக்கு அப்பாவான தகவலை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

அதாவது நடிகர் கமல் அவர்கள் ஆரம்பத்தில் பிரபல நடன கலைஞர் வாணியை காதலித்து லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார் அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்பு இருவரும் திருமணம் செய்து கொள்ள சில ஆண்டுகளிலேயே நடிகர் கமல் அவர்கள் தன்னுடைய வேலையை காட்டி இருக்கிறார் அதாவது பாலிவுட் நடிகையான சரிக்காவுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்திருக்கிறார்.

இந்த விஷயம் தெரிந்த வாணி கமலை 1988 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார் விவாகரத்தான சில மாதங்களிலேயே சரிகாவை திருமணம் செய்து கொண்டார் கமல். இந்த தம்பதியினருக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் உள்ளனர். கமல்ஹாசன் சரிகாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே சரிகா கமல் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்திருக்கிறார்கள்.

அப்போது இவர்கள் நெருங்கி பழகிய போது தான் நடிகை சுருதிஹாசன் பிறந்து விட்டாராம் இதனால் வேறு வழி இல்லாமல் சரிகாவின் ரிலேஷன்ஷிப்பை விட்டு அவரால் விலக முடியவில்லை அதனால் தான் நடிகை சரிகாவை திருமணம் செய்து கொண்டார் என்று தற்போது தகவல் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

Leave a Comment