மீடியா பக்கமே தலை காட்டாமல் இருந்த ஜீவாவின் மனைவியா இது.! வைரலாகும் புகைப்படம்

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரியின் மகன் என்ற அந்தஸ்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் ஜீவா இவர் முதன்முதலில் 2003ஆம் ஆண்டு ரவிமரியா இயக்கத்தில் சர்மி, நாசர், விஜயகுமார், ரமேஷ்கண்ணா, ஸ்ரீவித்யா யுவராணி ஆகியோர்கள் நடிப்பில் வெளியாகிய ஆசை ஆசையாய் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து தித்திக்குதே என்ற திரைப் படத்திலும் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது இதனை தொடர்ந்து 2005ஆம் ஆண்டு ராம் என்ற திரைப்படத்தில் ராமகிருஷ்ணா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தான் ஒரு நடிகன் என்ற அந்தஸ்தை பெற்றார் இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழா விருது  கிடைத்தது.

நடிகர் சிவாஜி கணேசன் அவர்களுக்கு பிறகு இவர்தான் சிறந்த விருதை வாங்கியுள்ளார் அதேபோல் தமிழில் மட்டுமல்லாமல் இந்தியிலும் நடித்துள்ளார் ஹிந்தியில் 83 என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். நடிகர் ஜீவா ஒரு காலகட்டத்தில் ஜீவா சுப்ரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்பொழுது இந்த தம்பதிகளுக்கு ஒரு அழகான மகன் இருக்கிறார். காதலர் தினத்தை பல பிரபலங்கள் கொண்டாடடி அதன் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்கள் அந்த வகையில் நடிகர் ஜீவா தன்னுடைய மனைவியுடன் தனது காதலை வெளிப்படுத்தும் விதமாக ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து  சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட ஜீவாவின் மனைவியா இது இவ்வளவு அழகாக ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கிறாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

jiiva wife

Leave a Comment

Exit mobile version